Cinar🍁kavithaigal. ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை.. ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை.. இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்! நாணலில் தொங்கி நிற்கும் பனித்துளி.. நீராடிவிட்டு வந்தவளின் கோதுமை கன்னத்தில் நீர்துளி! ஏக்கம் கற்பனை எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்றன.. நம் நிறைவேறா ஆசைகள்! பிம்பம் நானும் அழகாகத் தெரிந்தேன்.. அந்தக் கண்ணாடியில் நீ முகம் பார்த்த பிறகு! காந்தம் அவள் கண்களும் ஒரு வகையில் காந்தம்தான்.. என் இதய இரும்பை ஈர்ப்பதாலே! மரணமே இல்லை நிறம் பார்த்து வரும் காதல் நிரந்தரமானது இல்லை.. மனம் பார்த்து வரும் காதலுக்கு மரணமே இல்லை! போதை தான் அன்பும் ஒரு வகை போதை தான்.. அடிமையானால் ஆயுள் வரை கொல்லும்! காதல் செடி காதல் செடியில் ஒருமுறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பொய்.. எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதடி உன் ஒவ்வோர் புன்னகையிலும்.. என் காதல் ராட்சசி! இதுவும் பாவம் தான் நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட.. ஒரு வகையில் பாவம் தான்! பிடிக்காத வாழ்க்கை பிடித்தவரோடு வாழ்க்கை அமையாமல் போனாலும்.. பிடித்தவருக்கா
Cinar kavithaigal.
மற்றும் பல தகவலுக்கு நம்ம
இப்படி தனித்து வாழ்ந்திட
செல்லின அடிமையாய் இல்லாமல்
தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்.
காலையில் எழுப்பிட அப்பா
வேண்டாம் - Alarm app -இருக்கு!
நடைபயிற்சிக்கு நண்பன்
வேண்டாம் - step counter இருக்கு!
சமைத்து தந்திட அம்மா
வேண்டாம் - zomato, swiggy app இருக்கு!
பயணம் செய்ய பேருந்து
விலாசம் அறிய டீ - கடைக்காரரும்,
ஆட்டோ ஓட்டுனரும் வேண்டாம்
Google Map இருக்கு!
மளிகை வாங்க
செட்டியார் தாத்தா கடைக்கும்,
அண்ணாச்சி கடைக்கும்
போக வேண்டாம் - Big Basket இருக்கு!
துணி, மணிகள் வாங்க
கடைத்தெரு போக வேண்டாம் -
Amazon , Flipkart app இருக்கு!
நேரில் சிரித்து பேசிட
நண்பன் வேண்டாம் -
What's up, facebook இருக்கு!
கைமாறாக பணம் வாங்க
பங்காளியும்,அங்காளியும்
தேவையில்லை - Paytm app இருக்கு!
மற்றும் பல தகவலுக்கு நம்ம
Google டமாரம் இருக்கு!
இப்படி தனித்து வாழ்ந்திட
அனைத்தும் இருக்கு.....
App என்னும் ஆப்பு!!!
உள்ளங்கை நெல்லிக்கனியென
நீ நினைக்க !
விரித்திருப்பதோ மீள முடியாத
வலைதளம்.!
சிக்கிக்கொண்டோம் பூச்சிகளாய்!
விழித்தெழுந்து விடை கொடு..!
செல்லின அடிமையாய் இல்லாமல்
உறவுகளோடும் சேர்ந்து ஓர்
வலை பின்னுவோம்.....!
என்றும் அன்புடன் ...
Cinar kavithaigal
கருத்துகள்