SUBBIAH PATTURAJAN வருங்காலத்தைப் பற்றி வருடங்களாய் யோசிப்பதை விட நிகழ்காலத்தைப் பற்றி நிமிடங்கள் சிந்தித்தால் போதும். எப்படி என்றால் நன்றாக நடப்பதற்கு முன் ஒரு குழந்தை விழுவதைப் போல, தோல்விகள் அனைத்தும் வெற்றிப்படிகளே ஆகவே, தோல்விகளைக் கண்டு ஏமாற்றமோ, மனத்தளர்ச்சியோ அடையத் தேவையில்லை ஆகையால் வெற்றி என்பது அதிர்ஷ்டம் கிடையாது. அதிர்ஷ்டத்தால் ஒருவருக்கு வெற்றி கிடைப்பதில்லை திட்டமிட்டுத் தன் திறமையை வளர்த்து முன்னேறிச் செல்லும் ஒருவருக்குத் தான் வெற்றி கிடைக்கிறது அதிர்ஷ்டத்தால் கிடைத்த எந்த வெற்றியாக இருந்தாலும் நிலைப்பதில்லை உன் அடையாளம் நீயென்றால் உன் இலக்கை அடைய இலட்சம் நோக்கி ஓயாமல் இலட்சியத்தை நோக்கி பாய்ந்துவிடு வேகமாக செயல்படுவதை விட விவேகமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்
Cinar kavithaigal.
மற்றும் பல தகவலுக்கு நம்ம
இப்படி தனித்து வாழ்ந்திட
செல்லின அடிமையாய் இல்லாமல்
தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்.
காலையில் எழுப்பிட அப்பா
வேண்டாம் - Alarm app -இருக்கு!
நடைபயிற்சிக்கு நண்பன்
வேண்டாம் - step counter இருக்கு!
சமைத்து தந்திட அம்மா
வேண்டாம் - zomato, swiggy app இருக்கு!
பயணம் செய்ய பேருந்து
விலாசம் அறிய டீ - கடைக்காரரும்,
ஆட்டோ ஓட்டுனரும் வேண்டாம்
Google Map இருக்கு!
மளிகை வாங்க
செட்டியார் தாத்தா கடைக்கும்,
அண்ணாச்சி கடைக்கும்
போக வேண்டாம் - Big Basket இருக்கு!
துணி, மணிகள் வாங்க
கடைத்தெரு போக வேண்டாம் -
Amazon , Flipkart app இருக்கு!
நேரில் சிரித்து பேசிட
நண்பன் வேண்டாம் -
What's up, facebook இருக்கு!
கைமாறாக பணம் வாங்க
பங்காளியும்,அங்காளியும்
தேவையில்லை - Paytm app இருக்கு!
மற்றும் பல தகவலுக்கு நம்ம
Google டமாரம் இருக்கு!
இப்படி தனித்து வாழ்ந்திட
அனைத்தும் இருக்கு.....
App என்னும் ஆப்பு!!!
உள்ளங்கை நெல்லிக்கனியென
நீ நினைக்க !
விரித்திருப்பதோ மீள முடியாத
வலைதளம்.!
சிக்கிக்கொண்டோம் பூச்சிகளாய்!
விழித்தெழுந்து விடை கொடு..!
செல்லின அடிமையாய் இல்லாமல்
உறவுகளோடும் சேர்ந்து ஓர்
வலை பின்னுவோம்.....!
என்றும் அன்புடன் ...
Cinar kavithaigal
கருத்துகள்