முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

உன் அடையாளம் நீயென்றால் உன் இலக்கை அடைய விவேகமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்

SUBBIAH PATTURAJAN வருங்காலத்தைப் பற்றி வருடங்களாய்  யோசிப்பதை விட நிகழ்காலத்தைப் பற்றி நிமிடங்கள் சிந்தித்தால்  போதும். எப்படி என்றால் நன்றாக நடப்பதற்கு முன் ஒரு குழந்தை விழுவதைப் போல, தோல்விகள் அனைத்தும் வெற்றிப்படிகளே ஆகவே, தோல்விகளைக் கண்டு ஏமாற்றமோ,  மனத்தளர்ச்சியோ அடையத் தேவையில்லை ஆகையால் வெற்றி என்பது அதிர்ஷ்டம் கிடையாது.  அதிர்ஷ்டத்தால் ஒருவருக்கு வெற்றி கிடைப்பதில்லை திட்டமிட்டுத் தன் திறமையை வளர்த்து  முன்னேறிச் செல்லும் ஒருவருக்குத் தான் வெற்றி கிடைக்கிறது அதிர்ஷ்டத்தால் கிடைத்த எந்த வெற்றியாக இருந்தாலும் நிலைப்பதில்லை உன் அடையாளம் நீயென்றால் உன் இலக்கை அடைய இலட்சம் நோக்கி ஓயாமல் இலட்சியத்தை நோக்கி பாய்ந்துவிடு  வேகமாக செயல்படுவதை விட விவேகமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் 

உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே மதிக்காதே..!!

Cinar kavithaigal.    

தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே...
உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே  மதிக்காதே..!!

என் வாழ்வில் எனக்கு 
மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன; ஆனால், அது 
என் உதடுகளுக்கு தெரியாது.
அது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.!!😊

                              எதிர்நீச்சல் 

நான் பூக்களை விட முட்களை நேசிக்கின்றேன்
மழைத்துளிகளை விட பெரு வெள்ளத்தை விரும்புகிறேன் வானவில்லை விட மின்னலை காதலிக்கிறேன்
பனித்துளிகளை விட தீக்கதிரை அரவணைக்கிறேன்
தென்றலை விட புயலை ஆதரிக்கிறேன்..-ஆம்
இவைகளும் என்னைப் போன்று பிறர்
நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்

                                            தொடர்ச்சி 
வாழ்க்கையில் முடிவு என்பது எதுவும் இல்லை
போராட்டங்கள் உனதாக இருக்கப் பழகு
தோல்விகள் வரும் அஞ்சாதே ..
வெற்றிகள் உன்னுடன் சேரும்...
தொடர்ந்து முன்னேறு போதும் என்ற நினைவை 
விட்டு உழைத்து முன்னேறு
என்றும் வெற்றிகள்  உன்னுடன் மறக்காதே..

வலிகளை சுமக்கும் இதயத்திட்கு கண்ணீரை சுமக்க தெரியாது..
கண்ணீரை சுமக்கும் இதயத்திட்கு வலிகளை சுமக்க தெரியாது..

                                 நிரந்தரம் 

வெகு இலகுவாக கிடைக்கும் 
எதுவும் நிரந்தரமில்லை
விரைவில் வேறொருவருடையதாக
மாறிப்போகும்...
கடின உழைப்போடு 
கிடைத்த வெற்றிக்கு
மகிழ்ச்சியும் ஆயுளும் அதிகமே...

                                  துணை 

தனிமையை பகிர்ந்திட
துணையொன்று தேடினேன்,
இணைகொண்ட மனங்களும்
துணை வர தயங்கவே!
துணிந்தே அழைத்திட்டேன்
தனிமையை துணையென....
                                         பாசம் 
சிலருக்கு காட்ட  தெரிவதில்லை...
 சிலருக்கு காட்டுவது தெரிவதில்லை...
 சிலருக்கு காட்டுவது புரிவதே இல்லை ....
                                           சரிசமம் 
இன்பம் துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை  என்ற உண்மையை அறிந்தவர்கள் 
துன்பத்திலும் இதழ்களில் புன்னகைப்பதை மறக்கமாட்டார்கள்

                                             ஆதாரம் 

  பொய்களை எளிதாக
   நம்புகிற இந்த உலகம்...!
 உண்மையை நிரூபிக்க
  ஆதாரம் கேட்கிறது,
                                          
                                      முக்கியமானது    
 மனதில் தோன்றும் ஆசைகளை *அடக்க* 
வேண்டியதில்லை...!அதைச் 
 *சீரமைப்பதுதான்* முக்கியம்...!

                                    பேராசை 

வாழ்க்கையில் உங்களிடமிருந்து விழுந்ததை எடுக்க குனிந்து கொள்ளாதீர்கள்..நீங்கள் வளைந்தால்  உங்களிடமிருந்து நிறைய விழும்!

வாழ்க்கை அப்படியொன்றும்
புதிரானது இல்லை..
நாமாக விடை தேடி
அலையாதவரையில்.!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

படிக்கும் போது எல்லாம் வெட்கம் வருகிறதாம்...!!!

Cinar kavithaigal.                                                 'இலக்கு' 'இலக்கு' என்பது சிந்தனையாக மட்டுமே இல்லாது.. அடைந்தே தீர வேண்டும் என்ற 'இலட்சியமாகவும்' இருந்திடல் வேண்டும்!                                       இதயம்   தொலைந்ததைதேடலாம்.. தொலைத்ததைதேடிப் பயனில்லை..வாழ்க்கையில்...                                                 நாள்தோறும்   முடியாத பயணங்கள்வேண்டும்.. உன் கைவிரல் பிடித்தபடி!                                               கற்பனைகள்   காதலி  வேண்டுமென்பதில்லை.. கற்பனைகளே போதுமானதாகிறது.. கவி...

Today is November 25 in history

  Cinar kavithaigal. வரலாற்றில் இன்று 25/11-வியாழன் 885 : வைக்கிங் படையினர் 300 கப்பல்களில் செய்ன் ஆற்றில் சென்று பாரிஸைக் கைப்பற்றினர். 1034 : ஸ்காட்லாந்து மன்னர் மெல் கொலுயிம் இறந்தார். அவரது பேரன் டென்காட் புதிய மன்னராக முடிசூடினான். 1343 : டெரீனியன் கடலில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் நாபொலி உட்பட பல நகரங்கள் சேதமடைந்தன. 1667 : காகசஸ் பகுதியில் ஷேமாகா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். 1703 : பிரிட்டனில் இடம்பெற்ற சூறாவளியில் 9 ஆயிரம் பேர் பலியானார்கள். 1759 : பெய்ரூட், டமாஸ்கஸ் நகரங்களை நிலநடுக்கம் தாக்கியதில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.  1833 : சுமத்ராவில் 8.7 ரிக்டர் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது. 1839 : பலத்த சூறாவளியால் ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றிலும் சேதமடைந்தது.  30,000 பேர் வரை உயிரிழந்தனர். 1866 : அலகாபாத் உயர்நீதிமன்றம் 5 நீதிபதிகளுடன் துவக்கப்பட்டது. 1867 : ஆல்பிரட் நோபல், டைனமைட்டுக்கு காப்புரிமம் பெற்றார். 1905 : டென்மார்க் இளவரசர் கார்ல், ஏழாம் ஹா...