SUBBIAH PATTURAJAN வருங்காலத்தைப் பற்றி வருடங்களாய் யோசிப்பதை விட நிகழ்காலத்தைப் பற்றி நிமிடங்கள் சிந்தித்தால் போதும். எப்படி என்றால் நன்றாக நடப்பதற்கு முன் ஒரு குழந்தை விழுவதைப் போல, தோல்விகள் அனைத்தும் வெற்றிப்படிகளே ஆகவே, தோல்விகளைக் கண்டு ஏமாற்றமோ, மனத்தளர்ச்சியோ அடையத் தேவையில்லை ஆகையால் வெற்றி என்பது அதிர்ஷ்டம் கிடையாது. அதிர்ஷ்டத்தால் ஒருவருக்கு வெற்றி கிடைப்பதில்லை திட்டமிட்டுத் தன் திறமையை வளர்த்து முன்னேறிச் செல்லும் ஒருவருக்குத் தான் வெற்றி கிடைக்கிறது அதிர்ஷ்டத்தால் கிடைத்த எந்த வெற்றியாக இருந்தாலும் நிலைப்பதில்லை உன் அடையாளம் நீயென்றால் உன் இலக்கை அடைய இலட்சம் நோக்கி ஓயாமல் இலட்சியத்தை நோக்கி பாய்ந்துவிடு வேகமாக செயல்படுவதை விட விவேகமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்
Cinar kavithaigal.
தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே...
என் வாழ்வில் எனக்கு
மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன; ஆனால், அது
என் உதடுகளுக்கு தெரியாது.
அது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.!!😊
எதிர்நீச்சல்
நான் பூக்களை விட முட்களை நேசிக்கின்றேன்மழைத்துளிகளை விட பெரு வெள்ளத்தை விரும்புகிறேன் வானவில்லை விட மின்னலை காதலிக்கிறேன்பனித்துளிகளை விட தீக்கதிரை அரவணைக்கிறேன்தென்றலை விட புயலை ஆதரிக்கிறேன்..-ஆம் இவைகளும் என்னைப் போன்று பிறர் நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்
தொடர்ச்சி
வாழ்க்கையில் முடிவு என்பது எதுவும் இல்லை
போராட்டங்கள் உனதாக இருக்கப் பழகு
தோல்விகள் வரும் அஞ்சாதே ..
வெற்றிகள் உன்னுடன் சேரும்...
தொடர்ந்து முன்னேறு போதும் என்ற நினைவை
விட்டு உழைத்து முன்னேறு
என்றும் வெற்றிகள் உன்னுடன் மறக்காதே..
வலிகளை சுமக்கும் இதயத்திட்கு கண்ணீரை சுமக்க தெரியாது..
கண்ணீரை சுமக்கும் இதயத்திட்கு வலிகளை சுமக்க தெரியாது..
நிரந்தரம்
வெகு இலகுவாக கிடைக்கும்
எதுவும் நிரந்தரமில்லை
விரைவில் வேறொருவருடையதாக
மாறிப்போகும்...
கடின உழைப்போடு
கிடைத்த வெற்றிக்கு
மகிழ்ச்சியும் ஆயுளும் அதிகமே...
துணை
தனிமையை பகிர்ந்திட
துணையொன்று தேடினேன்,
இணைகொண்ட மனங்களும்
துணை வர தயங்கவே!
துணிந்தே அழைத்திட்டேன்
தனிமையை துணையென....
பாசம்
சிலருக்கு காட்ட தெரிவதில்லை...
சிலருக்கு காட்டுவது தெரிவதில்லை...
சிலருக்கு காட்டுவது புரிவதே இல்லை ....
சரிசமம்
இன்பம் துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை என்ற உண்மையை அறிந்தவர்கள்
துன்பத்திலும் இதழ்களில் புன்னகைப்பதை மறக்கமாட்டார்கள்
ஆதாரம்
பொய்களை எளிதாக
நம்புகிற இந்த உலகம்...!
உண்மையை நிரூபிக்க
ஆதாரம் கேட்கிறது,
முக்கியமானது
மனதில் தோன்றும் ஆசைகளை *அடக்க*
வேண்டியதில்லை...!அதைச்
*சீரமைப்பதுதான்* முக்கியம்...!
பேராசை
வாழ்க்கையில் உங்களிடமிருந்து விழுந்ததை எடுக்க குனிந்து கொள்ளாதீர்கள்..நீங்கள் வளைந்தால் உங்களிடமிருந்து நிறைய விழும்!
வாழ்க்கை அப்படியொன்றும்
புதிரானது இல்லை..
நாமாக விடை தேடி
அலையாதவரையில்.!
கருத்துகள்