முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

காதல் கவிதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்!

Cinar🍁kavithaigal. ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை.. ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை.. இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்! நாணலில் தொங்கி நிற்கும் பனித்துளி.. நீராடிவிட்டு வந்தவளின் கோதுமை கன்னத்தில் நீர்துளி! ஏக்கம்   கற்பனை எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்றன.. நம் நிறைவேறா  ஆசைகள்! பிம்பம்   நானும் அழகாகத் தெரிந்தேன்.. அந்தக் கண்ணாடியில் நீ முகம் பார்த்த பிறகு! காந்தம்   அவள் கண்களும் ஒரு வகையில் காந்தம்தான்.. என் இதய இரும்பை ஈர்ப்பதாலே! மரணமே இல்லை   நிறம் பார்த்து வரும் காதல்  நிரந்தரமானது இல்லை.. மனம் பார்த்து வரும் காதலுக்கு மரணமே இல்லை! போதை தான்  அன்பும் ஒரு வகை போதை தான்.. அடிமையானால் ஆயுள் வரை கொல்லும்! காதல் செடி காதல் செடியில்  ஒருமுறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பொய்.. எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதடி உன் ஒவ்வோர் புன்னகையிலும்.. என் காதல் ராட்சசி! இதுவும் பாவம் தான்   நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட.. ஒரு வகையில் பாவம் தான்! பிடிக்காத வாழ்க்கை பிடித்தவரோடு வாழ்க்கை அமையாமல் போனாலும்.. பிடித்தவருக்கா

உன் விழி வழியே எனக்கான பாதை அமைத்திடுவாயோ என்னவளே.!

Cinar kavithaigal. என்னவளே நினைப்பதற்கு முன்பே என்னெதிரில் வந்து நிற்கும் பூங்காற்று நீ! உன் விழி வழியே எனக்கான பாதை  அமைத்திடுவாயோ.. அதில் வந்து  உன்னைக் காண எனக்கு அனுமதியும்  அளித்திடுவாயோ! ஒரு நொடி உன்னை காண்பதற்காக.. காத்திருக்கும்  ஒவ்வொரு நாளும்.. பல யுகங்களை போல  நகர்கிறது! விருப்பம் பிடிக்கும் என்பதே ஒரு போதைதானே.. ஆனாலும் உன் உதட்டின் வார்த்தையில்  கேட்கும் போது அதன் சுகமே தனி ஆலாதி தான்.

நான் மரணித்த பின் நீங்கள் என்னை இழப்பீர்கள் ஆனால் நான் அதை உணர முடியாது இப்போதே என்னை வந்து சந்தியுங்கள் .

Cinar kavithaigal. *நீங்கள் விரும்பினால்*  *என்னுடன் அதிக நேரம் செலவலிக்க முடியும்*, நான் இறந்தவுடன்.*  *உங்கள் கண்ணில் கண்ணீர் வழியும்*  *ஆனால் அது எனக்கு எப்படி தெரியும்*  *இப்போதே என்னுடன் அழுது விடுங்கள்*.  *நீங்கள் எனக்காக அஞ்சலி செலுத்த பூக்களை அனுப்புவீர்கள்*,  *ஆனால் என்னால் அதைப் பார்க்க முடியாது*  *அதற்கு பதிலாக இப்போதே பூக்களை அனுப்பிவையுங்கள்*  *எனக்கு பாராட்டு வார்த்தைகள் தெரிவித்து சொல்லி தூக்கம் படுவீர்கள்*  *ஆனால் நான் அதைக் கேட்க முடியாது ஆதலால்*.  *இப்போதே என்னைப் பாராட்டுங்கள்*  *என் தவறுகளை உடனேயே மன்னித்து விடுவீர்கள்*  *ஆனால் அது எனக்கு எப்படி தெரியும் ஆகவே*.....  *  இப்போதே அவற்றை மறந்துவிட்டு அதற்கு பதிலாக நான் செய்த தவறுகளை இப்போதே மறந்து விடுங்கள்.  *நான் மரணித்த பின் நீங்கள் என்னை இழப்பீர்கள்,*  *ஆனால் நான் அதை உணர முடியாது.*  *இப்போதே என்னை வந்து சந்திக்கவும்.*  *நீங்கள் விரும்பினால்*  *என்னுடன் அதிக நேரம் செலவலிக்க முடியும்*,  *அதற்கு பதிலாக இப்போதே என்னுடன் நேரத்தை செலவு செய்யுங்கள்*  *நான் இறந்து விட்டேன் என்று நீங்கள் காதால் கேட்கும்போது, ​​​​இரங்கல் தெர

இந்த அன்பு துளிர்க்கும் ஒவ்வொரு முறையும் தலையில் அடித்து சிரித்துக்கொள்கிறோம்.நானும் என் காதலும்

Cinar kavithaigal. நானும் என் காதலும் ஒவ்வொரு சண்டைக்குப் பிறகும் என்னை பிளாக் செய்யச் சொல்லி உன்னிடம் கெஞ்சிக்கோண்டிருக்கிறேன்.. அவ்வளவு நேரமும் நீ தாமதமாய் வரும் வரை காத்திருந்து விட்டு வந்த பின்பு ஏன் வந்தாய் என்று கோபித்துக் கொள்கிறேன்.. அலைபேசி உரையாடலில் நீ கெஞ்சும் "லவ் யூ"க்களை சொல்லாமல் குறுஞ்செய்தியில் ஆங்ரி இமோஜியுடன் "ஹேட் யூ" க்களை அனுப்பிக்கொண்டிருப்பேன்.. இந்தப் ப்ரியத்திற்கு கொம்பு முளைக்கும் போதெல்லாம் தலையில் அடித்துக் கொண்டு சிரித்துக் கொள்கிறோம்.. நானும் என் காதலும் யாரிடமும் எதையும்  எதிர்பார்க்காத  என் மனம்.. உன்னிடம்  மட்டும் ஏனோ எதிர்பார்ப்பின்  ஏக்கத்தோடு.. மௌனமாய் நிற்கிறது

கோபப்படாமல் இருப்பவன் புத்திசாலி என்றால் ஒருபோதும் புத்திசாலியாக நான் இருக்கவே மாட்டேன்

Cinar kavithaigal. இதயத்தின் வலிமை  நான் என் இதயத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் ஏனென்றால் அது சிலரால் 💛விளையாடப்பட்டது, 💔ஏமாற்றப்பட்டது, 💔காயங்கள்பட்டது மற்றும் 💔உடைக்கப்பட்டது...! ஆனாலும் அது இன்னும் வேலை செய்கிறது.💓 மன்னிக்கத் தெரிந்தால் வாழ்க்கை அழகாகும்.. மறக்கத் தெரிந்தால் இந்த உலகமே அழகாகும்  அன்பின் துளி உரிமை உள்ள உறவும்.. உண்மை உள்ள அன்பும்.. நேர்மை உள்ள நட்பும்.. நம்பிக்கை உள்ள வாழ்வும்.. என்றும் விட்டுப்போவதுமில்லை... தோற்றுப்போவதுமில்லை! வசந்த காலம்   நாம் இமைக்காமல் பார்த்துக்கொண்ட நொடிகளில் நம் இதயங்களும் இடம்மாறிக்கொண்டது சாலையோர நடைப்பயிற்சியில் காலைநேர தென்றலாய் நீ… மௌனமாக பேசிட உன்னிதழ் மயங்கித்தான் போனது என் மனம்… புன்னகையுடன் ஆழமானஅன்பு   தேட விடும் அன்பை விட தேடி வரும் அன்பை நேசி....!!! அழகாக இல்லாமல் இருக்கலாம்..!! ஆனால் ஆழமான அன்பு இருக்கும்....!!💘 பாக்கியம்   வாழ்க்கையில் இவனையா  தவற விட்டோம் என..  ஒரு பெண் ஏங்கும்  பாக்கியம்  எல்லாம் ஆண்களுக்கும்  அமைந்து விடுவதில்லை  அன்புடன் ஏமாளி அன்போடு பழகுபவன் அடிமை என்றால் நான் அடிமையாகவே இருப்பேன்  அனைவரையும் நம்

ஒன்ஸ் மோர் காதல் கவிதைகள் Tamil WhatsApp status quotes

Cinar kavithaigal. ஒன்ஸ் மோர்   என் காதலுக்கு சாமர்த்தியம் போதவில்லை.. என் கைக்குட்டைக்கு கண்ணீரை அடக்கும் திறமையில்லை.. அழத்துணிந்த உதட்டுகளுக்கு பரிதவிப்புகளை பகட்டுமொழியில் கூறும் அறிவில்லை.. இத்தனைக்கும் என் காதல் ஒன்றும் காகித காதலில்லை.. வா.. மீண்டும் ஒரு காதல் செய்வோம்!,,💖👩‍❤️‍👨 சூழ்நிலை கைதி   சூழ்நிலை ஒரு  நொறுங்கிய கண்ணாடி.. நாம் ஒழுங்காக இருந்தாலும் அலங்கோலமாகவே காட்டும்  தேடல் முடிவுகள்  நீயில்லாத தருணங்களில்.. நட்சத்திரங்களும்  மின்மினிகளும் பட்டுப்பூச்சிகளும் தேடித்தவிக்கும்.. என்னைப் போலவே! எவரும் காணாத அழகிய பொக்கிஷமாய் ஓர் உண்மை காதல்.. எனக்குள் மட்டும் நினைவுகளாய்! சத்தியமான அன்பு மனதில் அன்பு  இருந்தாலே போதும்  எதுவும் சாத்தியமே.. கடினமான இதயம்  கூட கரையும்.. அன்பை மழையாய்  பொழியும் போது!

காதலித்துப்பார் உன் கணவனை.. அவரை விட சிறந்த காதலன் இருக்க முடியாது இவ்வுலகில்!

Cinar kavithaigal.                           பார்வை  👀 தீயின் வெப்பத்தை கூட என்னால் தாங்க இயலும்..உன் பார்வையின் தாக்கத்தை என்னால் தாங்க இயலவில்லை!                  அன்பு கணவர்.. 💘💘 காதலித்துப்பார் உன் கணவனை.. அவரை விட சிறந்த காதலன் இருக்க  முடியாது இவ்வுலகில்!                      வரமானவள் முத்தம் கூட வேண்டாம்.. உன் அருகாமையில்  கிடைக்கும் உன்  சுவாசகாற்றின்  வெப்பம் போதும்.. வாழும் காலம் வரை! உன் அணைப்புகளில்  இருக்கும் பொழுது  மட்டுமே உணர்கிறேன் நான் அத்தனை  வரமானவளென.. சில அன்புகள் கிடைப்பது  அத்தனை எளிதல்ல எனது உறவே!

*அம்பேத்கர் எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதங்கள்*

Cinar kavithaigal. ❤️காதலர் தின சிறப்புக் கட்டுரை❤️ உன்னைப்பற்றியே ஓயாமல் நினைத்துக்கொண்டிருக்கிறேன். யஷ்வந்த் குறித்தும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். உன்னை நான் புரிந்து கொள்ளவில்லை என எண்ணிவிடாதே ரமா. உன் வேதனையை நான் உணர்கிறேன். உதிரும் இலைகளைப் போல உன் உடல்நலம் தேய்வதையும், உன் உயிர் மரம் காய்ந்து சருகாவதையும் அறிவேன். ஆனால், நான் என்ன செய்ய இயலும் ரமா? எப்போதும் விலக மறுக்கும் வறுமை ஒருபுறம் இழுக்கிறது, மற்றொருபுறம் என்னுடைய பிடிவாதமும், உறுதிமிக்கச் சபதமும் நிற்கிறது._ *அண்ணல் அம்பேத்கர், தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்*

படிக்கும் போது எல்லாம் வெட்கம் வருகிறதாம்...!!!

Cinar kavithaigal.                                                 'இலக்கு' 'இலக்கு' என்பது சிந்தனையாக மட்டுமே இல்லாது.. அடைந்தே தீர வேண்டும் என்ற 'இலட்சியமாகவும்' இருந்திடல் வேண்டும்!                                       இதயம்   தொலைந்ததைதேடலாம்.. தொலைத்ததைதேடிப் பயனில்லை..வாழ்க்கையில்...                                                 நாள்தோறும்   முடியாத பயணங்கள்வேண்டும்.. உன் கைவிரல் பிடித்தபடி!                                               கற்பனைகள்   காதலி  வேண்டுமென்பதில்லை.. கற்பனைகளே போதுமானதாகிறது.. கவிதைக்கு..!!                                                   வடுக்கள்  வலிகள் ஆயிரம்  இருப்பினும் ஒரு போதும்  அதன் சாயங்களை  இங்கு பூசிவிடாதே.. பின்னொரு நாளில் அதுவே மறையாத வடுவாகிவிடும்!                                                         மறதி  நீரை நிறைத்திடும் பூக்கள் குளத்தை மறைத்திடுவது பாேல.. உன்னை நினைத்திடும் மனம்  என்னை மறந்தே தொலைக்கின்றது!                                              இல்லாத ஒன்று   உன்னைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக

உனக்கும் எனக்குமான புரிதலில் மட்டுமே அழகாகிறது உலகம்!

Cinar kavithaigal.                                             தேவதாஸ்  காதலிப்பவன் அழகிய காதல் கவிதைகளைவடித்திருக்கலாம்.. ஆனால் காதலை இழந்தவன் தான் அற்புத காதல் கவிதைகளை படைத்திருக்கிறான்!                                                            கரிசனம்  நின் முன்னழகால்நானுடைந்தது போதாதா.. இனி கண்ணாடியுமா!?                                                   மனைவி   சண்டையோ..அன்போ.. உன்னிடம் இருந்து மட்டுமே எதிர்பார்க்கிறது இந்த மனசு!                                              நினைவுகள்    மறந்து போன நினைவுகளை  மீண்டும் தூசி தட்டி  எழுப்பி விடுகிறது.. எங்கிருந்தோ கேட்கும்  நமக்குப் பிடித்த பாடல்! பரிதவிப்பு   அலைபேசி சிணுங்கிஅழைக்கும் போதெல்லாம்படபடத்துப் பறக்குதுபாதங்கள் இரண்டும்..அழைப்பது நீயாக இருக்கவேண்டுமென்ற ஆவலோடு!     கண்டனம்                                               உன்னை முழுக்க நனைத்த மழைக்கு கண்டனம் தெரிவிக்கும்..கருப்புக் குடைகள்!                                               சாகாவரம்  தோள் சாயும் நேரம் உயிர்மீற.. உன் ஒற்றைவிரல் போதும்.. கன்ன கதுப்பில் கோலமிட்டுஉயிர

நீ.. திரும்பிப் பார்ப்பாய் என்றுதான் விரும்பிப் பார்த்திருந்தேன்..

 Cinar kavithaigal நீ.. திரும்பிப் பார்ப்பாய் என்றுதான் விரும்பிப் பார்த்திருந்தேன்.. நீ.. விரும்பிப் பார்த்தாய் எனத் தெரிந்திருந்தால்.. நான் .. திரும்பத் திரும்ப பார்த்திருப்பேன்!! 💚💜