முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ..?

Cinar kavithaigal.

இன்று உங்கள் வாழ்வின் மிகச் சிறந்த நாள் .

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ..?
அதை சிறப்பாக வாழ்வது
உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

ஒவ்வொரு நாளையும் இறைவன் ஒரு வாரமாக நமக்கு அளிக்கிறார் .
இந்த நாளை நம்மால் பார்க்க முடிகிறது என்றால் நாம் உயிரோடு இருக்கிறோம். அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

இந்த நாளை எந்த அளவிற்கு சிறப்பாக வாழ முடியுமோ அந்த அளவிற்கு சிறப்பாக வாழ்வோம் .
நம்மிடம் இல்லாததை நினைத்து கவலைக் கொள்ளாமல்.. இருப்பதை நினைத்து திருப்தி அடைவோம்.

" மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ......"🤔

"மற்றவர்கள் நமது திறமைக்கும் முயற்சிக்கும் அங்கீகாரம் தருகிறார்களா..."🤔
"அவர்களைப் போல நமக்கும் நடந்துவிடுமோ.."🤔
"அவர்களிடம் இருப்பது நம்மிடம்  இல்லையே..."…🤔

இதுபோன்ற தேவையற்ற எண்ணங்களால் உங்களது வாழ்க்கை என்ற பொக்கிஷத்தின் விலைமதிப்பற்ற நிமிடங்களை வீணாக்காமல்
ஒவ்வொரு நொடியையும் உங்களுக்காக சிறப்பாக வாழுங்கள்.

உங்கள் சூழ்நிலைகள் உங்களை
இயக்க அனுமதிக்காதீர்கள்.
 சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அப்போது உங்களைச் சுற்றி இருக்கும் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

 உங்களை நீங்களே விரும்புங்கள்.
இந்த உலகமே உங்களை விரும்பினாலும் உங்களை
 நீங்கள் முழுமையாக விரும்பினால் மட்டுமே உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

 உங்கள் மனதில் "எதை அடைய வேண்டுமோ அதை அடைந்தே தீருவேன் " என்ற வைராக்கியத்துடன் இருந்தால் உங்களால் எல்லாவற்றையும் அடைய முடியும்.
 நிச்சயம் அடைந்து காட்டுவீர்கள்👍

 உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பிய அனைத்தையும் அடைந்து சிறப்பாக வாழ்வதற்கு வாழ்த்துக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே மதிக்காதே..!!

Cinar kavithaigal.     தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே... உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே   மதிக்காதே..!! 😏 என் வாழ்வில் எனக்கு  மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன; ஆனால், அது  என் உதடுகளுக்கு தெரியாது. அது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.!!😊      - சார்லி சாப்ளின்                                எதிர்நீச்சல்  நான் பூக்களை விட முட்களை நேசிக்கின்றேன் மழைத்துளிகளை விட பெரு வெள்ளத்தை விரும்புகிறேன் வானவில்லை விட மின்னலை காதலிக்கிறேன் பனித்துளிகளை விட தீக்கதிரை அரவணைக்கிறேன் தென்றலை விட புயலை ஆதரிக்கிறேன்..-ஆம் இவைகளும் என்னைப் போன்று பிறர் நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்                                             தொடர்ச்சி   வாழ்க்கையில் முடிவு என்பது எதுவும் இல்லை போராட்டங்கள் உனதாக இருக்கப் பழகு தோல்விகள் வரு...

கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம் கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் !

Cinar kavithaigal. என்னால் முடியுமா ?என்ற எண்ணம் வேண்டாம் என்னால் முடியும் என்றே முயன்றிடு முடியும் ! உன் லட்சியத்தின் மீது விருப்பம் வேண்டும் உன் மீது உனக்கு தன்னம்பிக்கை வேண்டும் ! திட்டமிட்டு பயிற்சி செய்து வந்தால் திடமான வெற்றி உறுதியாகக் கிட்டும்  கவனத்தைக் கண்டதில் சிதற விடாமல் கவனம் செலுத்தினால் வாகை சூடலாம் ! நேரத்தை நீ மதித்து நடந்தால் நேரம் உன்னை மதித்து நடக்கும் ! சிந்தனை செயல் நோக்கம் மீதிருந்தால் சிறப்பான வெற்றி தேடி வந்து சேரும் ! கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம் கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் ! முந்தைய சாதனை வரலாறு படித்திடு முயன்று முந்தையதை முறியிடித்திடு ! அதுக்கெல்லாம் திறமை வேண்டும் தயங்காதே அதுக்கான திறமை உன்னிடம் உள்ளது ! உன்னை நீ முதலில் முழுதாக நம்பு உன்னை நீ சந்தேகிப்பது வீண் வம்பு ! நான் சாதிக்கப் பிறந்தவன் என்பதை நாளும் மனதிற்குள் சொல்லிக் கொண்டிரு ! முற்றிலும் உண்மை முயற்சி திருவினையாக்கும் முப்பால் வடித்தவர் கூற்று பொய்க்காது ! *பூ தானாக மலரவேண்டும் மாலையும் மரியாதையும் தானாக கிடைக்க வேண்டும்.! மரியாதை மரியாதை   ராஜா இரவில் மாறுவேடத்தில...

*அம்பேத்கர் எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதங்கள்*

Cinar kavithaigal. ❤️காதலர் தின சிறப்புக் கட்டுரை❤️ உன்னைப்பற்றியே ஓயாமல் நினைத்துக்கொண்டிருக்கிறேன். யஷ்வந்த் குறித்தும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். உன்னை நான் புரிந்து கொள்ளவில்லை என எண்ணிவிடாதே ரமா. உன் வேதனையை நான் உணர்கிறேன். உதிரும் இலைகளைப் போல உன் உடல்நலம் தேய்வதையும், உன் உயிர் மரம் காய்ந்து சருகாவதையும் அறிவேன். ஆனால், நான் என்ன செய்ய இயலும் ரமா? எப்போதும் விலக மறுக்கும் வறுமை ஒருபுறம் இழுக்கிறது, மற்றொருபுறம் என்னுடைய பிடிவாதமும், உறுதிமிக்கச் சபதமும் நிற்கிறது._ *அண்ணல் அம்பேத்கர், தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்*