SUBBIAH PATTURAJAN வருங்காலத்தைப் பற்றி வருடங்களாய் யோசிப்பதை விட நிகழ்காலத்தைப் பற்றி நிமிடங்கள் சிந்தித்தால் போதும். எப்படி என்றால் நன்றாக நடப்பதற்கு முன் ஒரு குழந்தை விழுவதைப் போல, தோல்விகள் அனைத்தும் வெற்றிப்படிகளே ஆகவே, தோல்விகளைக் கண்டு ஏமாற்றமோ, மனத்தளர்ச்சியோ அடையத் தேவையில்லை ஆகையால் வெற்றி என்பது அதிர்ஷ்டம் கிடையாது. அதிர்ஷ்டத்தால் ஒருவருக்கு வெற்றி கிடைப்பதில்லை திட்டமிட்டுத் தன் திறமையை வளர்த்து முன்னேறிச் செல்லும் ஒருவருக்குத் தான் வெற்றி கிடைக்கிறது அதிர்ஷ்டத்தால் கிடைத்த எந்த வெற்றியாக இருந்தாலும் நிலைப்பதில்லை உன் அடையாளம் நீயென்றால் உன் இலக்கை அடைய இலட்சம் நோக்கி ஓயாமல் இலட்சியத்தை நோக்கி பாய்ந்துவிடு வேகமாக செயல்படுவதை விட விவேகமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்
Cinar🍁kavithaigal.ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை..
ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை..
ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை..
இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்!
நாணலில்
தொங்கி நிற்கும்
பனித்துளி..
நீராடிவிட்டு வந்தவளின்
கோதுமை கன்னத்தில்
நீர்துளி!
ஏக்கம்
கற்பனை எனும்
போர்வைக்குள்
ஒளிந்திருக்கின்றன..
நம் நிறைவேறா ஆசைகள்!
பிம்பம்
நானும் அழகாகத்
தெரிந்தேன்..
அந்தக் கண்ணாடியில்
நீ முகம் பார்த்த பிறகு!
காந்தம்
அவள் கண்களும்
ஒரு வகையில் காந்தம்தான்..
என் இதய இரும்பை
ஈர்ப்பதாலே!
மரணமே இல்லை
நிறம் பார்த்து
வரும் காதல்
நிரந்தரமானது
இல்லை..
மனம் பார்த்து
வரும் காதலுக்கு
மரணமே இல்லை!
போதை தான்
அன்பும்
ஒரு வகை போதை தான்..
அடிமையானால்
ஆயுள் வரை கொல்லும்!
காதல் செடி
காதல் செடியில்
ஒருமுறை தான்
காதல் வரும்
என்பதெல்லாம் பொய்..
எனக்கு
புதிது புதிதாய்
காதல் வருகிறதடி
உன் ஒவ்வோர்
புன்னகையிலும்..
என் காதல் ராட்சசி!
இதுவும் பாவம் தான்
நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட..
ஒரு வகையில்
பாவம் தான்!
பிடிக்காத வாழ்க்கை
பிடித்தவரோடு வாழ்க்கை அமையாமல் போனாலும்..
பிடித்தவருக்காக வாழ்ந்திடுங்கள்..
பிடிக்காத வாழ்க்கையும் பிடித்துவிடும்!

கருத்துகள்