Cinar🍁kavithaigal. ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை.. ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை.. இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்! நாணலில் தொங்கி நிற்கும் பனித்துளி.. நீராடிவிட்டு வந்தவளின் கோதுமை கன்னத்தில் நீர்துளி! ஏக்கம் கற்பனை எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்றன.. நம் நிறைவேறா ஆசைகள்! பிம்பம் நானும் அழகாகத் தெரிந்தேன்.. அந்தக் கண்ணாடியில் நீ முகம் பார்த்த பிறகு! காந்தம் அவள் கண்களும் ஒரு வகையில் காந்தம்தான்.. என் இதய இரும்பை ஈர்ப்பதாலே! மரணமே இல்லை நிறம் பார்த்து வரும் காதல் நிரந்தரமானது இல்லை.. மனம் பார்த்து வரும் காதலுக்கு மரணமே இல்லை! போதை தான் அன்பும் ஒரு வகை போதை தான்.. அடிமையானால் ஆயுள் வரை கொல்லும்! காதல் செடி காதல் செடியில் ஒருமுறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பொய்.. எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதடி உன் ஒவ்வோர் புன்னகையிலும்.. என் காதல் ராட்சசி! இதுவும் பாவம் தான் நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட.. ஒரு வகையில் பாவம் தான்! பிடிக்காத வாழ்க்கை பிடித்தவரோடு வாழ்க்கை அமையாமல் போனாலும்.. பிடித்தவருக்கா
Cinar kavithaigal. நானும் என் காதலும் ஒவ்வொரு சண்டைக்குப் பிறகும் என்னை பிளாக் செய்யச் சொல்லி உன்னிடம் கெஞ்சிக்கோண்டிருக்கிறேன்.. அவ்வளவு நேரமும் நீ தாமதமாய் வரும் வரை காத்திருந்து விட்டு வந்த பின்பு ஏன் வந்தாய் என்று கோபித்துக் கொள்கிறேன்.. அலைபேசி உரையாடலில் நீ கெஞ்சும் "லவ் யூ"க்களை சொல்லாமல் குறுஞ்செய்தியில் ஆங்ரி இமோஜியுடன் "ஹேட் யூ" க்களை அனுப்பிக்கொண்டிருப்பேன்.. இந்தப் ப்ரியத்திற்கு கொம்பு முளைக்கும் போதெல்லாம் தலையில் அடித்துக் கொண்டு சிரித்துக் கொள்கிறோம்.. நானும் என் காதலும் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத என் மனம்.. உன்னிடம் மட்டும் ஏனோ எதிர்பார்ப்பின் ஏக்கத்தோடு.. மௌனமாய் நிற்கிறது