Cinar🍁kavithaigal. ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை.. ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை.. இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்! நாணலில் தொங்கி நிற்கும் பனித்துளி.. நீராடிவிட்டு வந்தவளின் கோதுமை கன்னத்தில் நீர்துளி! ஏக்கம் கற்பனை எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்றன.. நம் நிறைவேறா ஆசைகள்! பிம்பம் நானும் அழகாகத் தெரிந்தேன்.. அந்தக் கண்ணாடியில் நீ முகம் பார்த்த பிறகு! காந்தம் அவள் கண்களும் ஒரு வகையில் காந்தம்தான்.. என் இதய இரும்பை ஈர்ப்பதாலே! மரணமே இல்லை நிறம் பார்த்து வரும் காதல் நிரந்தரமானது இல்லை.. மனம் பார்த்து வரும் காதலுக்கு மரணமே இல்லை! போதை தான் அன்பும் ஒரு வகை போதை தான்.. அடிமையானால் ஆயுள் வரை கொல்லும்! காதல் செடி காதல் செடியில் ஒருமுறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பொய்.. எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதடி உன் ஒவ்வோர் புன்னகையிலும்.. என் காதல் ராட்சசி! இதுவும் பாவம் தான் நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட.. ஒரு வகையில் பாவம் தான்! பிடிக்காத வாழ்க்கை பிடித்தவரோடு வாழ்க்கை அமையாமல் போனாலும்.. பிடித்தவருக்கா
Cinar kavithaigal. நிதர்சனம் நாம் சந்திப்பவர்களை நண்பனா, எதிரியா தீர்மானிப்பதில் காலம் தான் முதலில் முடிவு செய்கிறது வாழ்க்கை பயணம் வரப்பிரசாதம் இனி மாறிடவா போகிறது என்கிற எண்ணத்திற்கு முட்டுக்கட்டை போட்டபடியாக நான்மாற்றி காட்டுகிறேன் என அழகாய் நம்பிக்கை தந்து வழி நடத்திடும் நட்பு வாழ்வின் வரம் அளவுகோல் அன்பு ஒரு போதை தான் சிலரை அழவைக்கும் சிலரை அடிமைப்படுத்தும் சிலரை சிதைக்கும் சிலரை வெறுக்க செய்யும் சிலரை கோபப்படுத்தும் சிலரை குழந்தையாக மாற்றும் இதற்கு பரிமாணங்கள் வேறு ஆனால்..!! நாம் கையாளுவதை பொறுத்து அதன் தன்மைகள் உள்ளது அன்பில் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு நம்பிக்கை பல கவலைகளையும் பிரச்சனைகளையும் கடந்து வந்துவிட்டோம் இவ்வளவு தூரம்.. இனிவரும் இன்னல்களையும் கடப்போம் மனதிடத்துடனும் நம்பிக்கையுடன் .. குழந்தை மனசு இந்த தனிமையில் வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்தால்...செய்த அட்டகாசங்கள் யாவும் பசுமையாக இருக்கிறது நினைவில்..யாரையோ நினைத்து அழுதவைகள் எல்லாம் இன்ற