முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

படிக்கும் போது எல்லாம் வெட்கம் வருகிறதாம்...!!!

Cinar kavithaigal.
                                               'இலக்கு'
'இலக்கு' என்பது சிந்தனையாக மட்டுமே இல்லாது..
அடைந்தே தீர வேண்டும் என்ற
'இலட்சியமாகவும்' இருந்திடல் வேண்டும்!

படிக்கும் போது எல்லாம்  வெட்கம் வருகிறதாம்...!!!
                                      இதயம் 
தொலைந்ததைதேடலாம்..தொலைத்ததைதேடிப் பயனில்லை..வாழ்க்கையில்...
                                               நாள்தோறும் 

முடியாத பயணங்கள்வேண்டும்..
உன் கைவிரல் பிடித்தபடி!

                                             கற்பனைகள் 
காதலி வேண்டுமென்பதில்லை..
கற்பனைகளே
போதுமானதாகிறது..
கவிதைக்கு..!!
                                                 வடுக்கள் 
வலிகள் ஆயிரம் இருப்பினும்
ஒரு போதும் அதன் சாயங்களை இங்கு பூசிவிடாதே..
பின்னொரு
நாளில் அதுவே
மறையாத வடுவாகிவிடும்!
                                                       மறதி 
நீரை நிறைத்திடும் பூக்கள்
குளத்தை மறைத்திடுவது பாேல..
உன்னை நினைத்திடும் மனம் 
என்னை மறந்தே தொலைக்கின்றது!
                                            இல்லாத ஒன்று 

                                     நல்ல நண்பன்

என் வாழ்வின் மிகச் சிறந்த நண்பனை..

நான் எப்போதும் கண்ணாடியில் மட்டுமே  காண்பேன்!

                                     காதல் தோல்வி

மரண வலியை கூட தாங்கி கொள்ளலாம்..
மன வலியை தான் தாங்க முடியவில்லை!
                                   காதலை இழந்தவன் 
காதலிப்பவன் அழகிய காதல் கவிதைகளை
வடித்திருக்கலாம்..
ஆனால்.. 
காதலை இழந்தவன் தான் அற்புத
காதல் கவிதைகளை
படைத்திருக்கிறான்!
                                              என் ராட்சஷி            
கவிதையின் ராட்சஷிக்கு
காதல் வந்து விட்டதாம்
என் மீது அல்ல என் கவிதை மீது 
அவள் வெட்கத்திற்கே
என் முதல் கவிதை 
முத்தமாய்..
                                                    நாணம் 
என்றோ விழுந்துவிட்டேன் உனதன்பில்..
இப்படி பார்வையால் மேலும்
கொள்கிறாய்.  என்னை..
எவ்வளவு நேரம் தான் 
படிப்பது போல  நடிப்பது நானும்..! 🙃







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில் தான் உள்ளது.

Cinar kavithaigal. நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.  அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.  நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.  சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.  சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.  எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்!  அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.  எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன். ஆனால் அந்த நபருக்கு , நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை. அவரைக் ...

உன் விழி வழியே எனக்கான பாதை அமைத்திடுவாயோ என்னவளே.!

Cinar kavithaigal. என்னவளே நினைப்பதற்கு முன்பே என்னெதிரில் வந்து நிற்கும் பூங்காற்று நீ! உன் விழி வழியே எனக்கான பாதை  அமைத்திடுவாயோ.. அதில் வந்து  உன்னைக் காண எனக்கு அனுமதியும்  அளித்திடுவாயோ! ஒரு நொடி உன்னை காண்பதற்காக.. காத்திருக்கும்  ஒவ்வொரு நாளும்.. பல யுகங்களை போல  நகர்கிறது! விருப்பம் பிடிக்கும் என்பதே ஒரு போதைதானே.. ஆனாலும் உன் உதட்டின் வார்த்தையில்  கேட்கும் போது அதன் சுகமே தனி ஆலாதி தான்.

கோபப்படாமல் இருப்பவன் புத்திசாலி என்றால் ஒருபோதும் புத்திசாலியாக நான் இருக்கவே மாட்டேன்

Cinar kavithaigal. இதயத்தின் வலிமை  நான் என் இதயத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் ஏனென்றால் அது சிலரால் 💛விளையாடப்பட்டது, 💔ஏமாற்றப்பட்டது, 💔காயங்கள்பட்டது மற்றும் 💔உடைக்கப்பட்டது...! ஆனாலும் அது இன்னும் வேலை செய்கிறது.💓 மன்னிக்கத் தெரிந்தால் வாழ்க்கை அழகாகும்.. மறக்கத் தெரிந்தால் இந்த உலகமே அழகாகும்  அன்பின் துளி உரிமை உள்ள உறவும்.. உண்மை உள்ள அன்பும்.. நேர்மை உள்ள நட்பும்.. நம்பிக்கை உள்ள வாழ்வும்.. என்றும் விட்டுப்போவதுமில்லை... தோற்றுப்போவதுமில்லை! வசந்த காலம்   நாம் இமைக்காமல் பார்த்துக்கொண்ட நொடிகளில் நம் இதயங்களும் இடம்மாறிக்கொண்டது சாலையோர நடைப்பயிற்சியில் காலைநேர தென்றலாய் நீ… மௌனமாக பேசிட உன்னிதழ் மயங்கித்தான் போனது என் மனம்… புன்னகையுடன் ஆழமானஅன்பு   தேட விடும் அன்பை விட தேடி வரும் அன்பை நேசி....!!! அழகாக இல்லாமல் இருக்கலாம்..!! ஆனால் ஆழமான அன்பு இருக்கும்....!!💘 பாக்கியம்   வாழ்க்கையில் இவனையா  தவற விட்டோம் என..  ஒரு பெண் ஏங்கும்  பாக்கியம்  எல்லாம் ஆண்களுக்கும்  அமைந்து விடுவதில்லை  அன்புடன் ஏமாளி அன்போடு பழகுபவன் அ...