முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

படிக்கும் போது எல்லாம் வெட்கம் வருகிறதாம்...!!!

Cinar kavithaigal.
                                               'இலக்கு'
'இலக்கு' என்பது சிந்தனையாக மட்டுமே இல்லாது..
அடைந்தே தீர வேண்டும் என்ற
'இலட்சியமாகவும்' இருந்திடல் வேண்டும்!

படிக்கும் போது எல்லாம்  வெட்கம் வருகிறதாம்...!!!
                                      இதயம் 
தொலைந்ததைதேடலாம்..தொலைத்ததைதேடிப் பயனில்லை..வாழ்க்கையில்...
                                               நாள்தோறும் 

முடியாத பயணங்கள்வேண்டும்..
உன் கைவிரல் பிடித்தபடி!

                                             கற்பனைகள் 
காதலி வேண்டுமென்பதில்லை..
கற்பனைகளே
போதுமானதாகிறது..
கவிதைக்கு..!!
                                                 வடுக்கள் 
வலிகள் ஆயிரம் இருப்பினும்
ஒரு போதும் அதன் சாயங்களை இங்கு பூசிவிடாதே..
பின்னொரு
நாளில் அதுவே
மறையாத வடுவாகிவிடும்!
                                                       மறதி 
நீரை நிறைத்திடும் பூக்கள்
குளத்தை மறைத்திடுவது பாேல..
உன்னை நினைத்திடும் மனம் 
என்னை மறந்தே தொலைக்கின்றது!
                                            இல்லாத ஒன்று 

                                     நல்ல நண்பன்

என் வாழ்வின் மிகச் சிறந்த நண்பனை..

நான் எப்போதும் கண்ணாடியில் மட்டுமே  காண்பேன்!

                                     காதல் தோல்வி

மரண வலியை கூட தாங்கி கொள்ளலாம்..
மன வலியை தான் தாங்க முடியவில்லை!
                                   காதலை இழந்தவன் 
காதலிப்பவன் அழகிய காதல் கவிதைகளை
வடித்திருக்கலாம்..
ஆனால்.. 
காதலை இழந்தவன் தான் அற்புத
காதல் கவிதைகளை
படைத்திருக்கிறான்!
                                              என் ராட்சஷி            
கவிதையின் ராட்சஷிக்கு
காதல் வந்து விட்டதாம்
என் மீது அல்ல என் கவிதை மீது 
அவள் வெட்கத்திற்கே
என் முதல் கவிதை 
முத்தமாய்..
                                                    நாணம் 
என்றோ விழுந்துவிட்டேன் உனதன்பில்..
இப்படி பார்வையால் மேலும்
கொள்கிறாய்.  என்னை..
எவ்வளவு நேரம் தான் 
படிப்பது போல  நடிப்பது நானும்..! 🙃







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே மதிக்காதே..!!

Cinar kavithaigal.     தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே... உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே   மதிக்காதே..!! 😏 என் வாழ்வில் எனக்கு  மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன; ஆனால், அது  என் உதடுகளுக்கு தெரியாது. அது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.!!😊      - சார்லி சாப்ளின்                                எதிர்நீச்சல்  நான் பூக்களை விட முட்களை நேசிக்கின்றேன் மழைத்துளிகளை விட பெரு வெள்ளத்தை விரும்புகிறேன் வானவில்லை விட மின்னலை காதலிக்கிறேன் பனித்துளிகளை விட தீக்கதிரை அரவணைக்கிறேன் தென்றலை விட புயலை ஆதரிக்கிறேன்..-ஆம் இவைகளும் என்னைப் போன்று பிறர் நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்                                             தொடர்ச்சி   வாழ்க்கையில் முடிவு என்பது எதுவும் இல்லை போராட்டங்கள் உனதாக இருக்கப் பழகு தோல்விகள் வரு...

கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம் கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் !

Cinar kavithaigal. என்னால் முடியுமா ?என்ற எண்ணம் வேண்டாம் என்னால் முடியும் என்றே முயன்றிடு முடியும் ! உன் லட்சியத்தின் மீது விருப்பம் வேண்டும் உன் மீது உனக்கு தன்னம்பிக்கை வேண்டும் ! திட்டமிட்டு பயிற்சி செய்து வந்தால் திடமான வெற்றி உறுதியாகக் கிட்டும்  கவனத்தைக் கண்டதில் சிதற விடாமல் கவனம் செலுத்தினால் வாகை சூடலாம் ! நேரத்தை நீ மதித்து நடந்தால் நேரம் உன்னை மதித்து நடக்கும் ! சிந்தனை செயல் நோக்கம் மீதிருந்தால் சிறப்பான வெற்றி தேடி வந்து சேரும் ! கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம் கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் ! முந்தைய சாதனை வரலாறு படித்திடு முயன்று முந்தையதை முறியிடித்திடு ! அதுக்கெல்லாம் திறமை வேண்டும் தயங்காதே அதுக்கான திறமை உன்னிடம் உள்ளது ! உன்னை நீ முதலில் முழுதாக நம்பு உன்னை நீ சந்தேகிப்பது வீண் வம்பு ! நான் சாதிக்கப் பிறந்தவன் என்பதை நாளும் மனதிற்குள் சொல்லிக் கொண்டிரு ! முற்றிலும் உண்மை முயற்சி திருவினையாக்கும் முப்பால் வடித்தவர் கூற்று பொய்க்காது ! *பூ தானாக மலரவேண்டும் மாலையும் மரியாதையும் தானாக கிடைக்க வேண்டும்.! மரியாதை மரியாதை   ராஜா இரவில் மாறுவேடத்தில...

*அம்பேத்கர் எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதங்கள்*

Cinar kavithaigal. ❤️காதலர் தின சிறப்புக் கட்டுரை❤️ உன்னைப்பற்றியே ஓயாமல் நினைத்துக்கொண்டிருக்கிறேன். யஷ்வந்த் குறித்தும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். உன்னை நான் புரிந்து கொள்ளவில்லை என எண்ணிவிடாதே ரமா. உன் வேதனையை நான் உணர்கிறேன். உதிரும் இலைகளைப் போல உன் உடல்நலம் தேய்வதையும், உன் உயிர் மரம் காய்ந்து சருகாவதையும் அறிவேன். ஆனால், நான் என்ன செய்ய இயலும் ரமா? எப்போதும் விலக மறுக்கும் வறுமை ஒருபுறம் இழுக்கிறது, மற்றொருபுறம் என்னுடைய பிடிவாதமும், உறுதிமிக்கச் சபதமும் நிற்கிறது._ *அண்ணல் அம்பேத்கர், தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்*