Cinar🍁kavithaigal. ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை.. ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை.. இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்! நாணலில் தொங்கி நிற்கும் பனித்துளி.. நீராடிவிட்டு வந்தவளின் கோதுமை கன்னத்தில் நீர்துளி! ஏக்கம் கற்பனை எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்றன.. நம் நிறைவேறா ஆசைகள்! பிம்பம் நானும் அழகாகத் தெரிந்தேன்.. அந்தக் கண்ணாடியில் நீ முகம் பார்த்த பிறகு! காந்தம் அவள் கண்களும் ஒரு வகையில் காந்தம்தான்.. என் இதய இரும்பை ஈர்ப்பதாலே! மரணமே இல்லை நிறம் பார்த்து வரும் காதல் நிரந்தரமானது இல்லை.. மனம் பார்த்து வரும் காதலுக்கு மரணமே இல்லை! போதை தான் அன்பும் ஒரு வகை போதை தான்.. அடிமையானால் ஆயுள் வரை கொல்லும்! காதல் செடி காதல் செடியில் ஒருமுறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பொய்.. எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதடி உன் ஒவ்வோர் புன்னகையிலும்.. என் காதல் ராட்சசி! இதுவும் பாவம் தான் நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட.. ஒரு வகையில் பாவம் தான்! பிடிக்காத வாழ்க்கை பிடித்தவரோடு வாழ்க்கை அமையாமல் போனாலும்.. பிடித்தவருக்கா
Cinar kavithaigal.
'இலக்கு'
முடியாத பயணங்கள்வேண்டும்..
'இலக்கு' என்பது சிந்தனையாக மட்டுமே இல்லாது..
அடைந்தே தீர வேண்டும் என்ற
'இலட்சியமாகவும்' இருந்திடல் வேண்டும்!
இதயம்
தொலைந்ததைதேடலாம்..தொலைத்ததைதேடிப் பயனில்லை..வாழ்க்கையில்...
நாள்தோறும்
முடியாத பயணங்கள்வேண்டும்..
உன் கைவிரல் பிடித்தபடி!
கற்பனைகள்
காதலி வேண்டுமென்பதில்லை..
கற்பனைகளே
போதுமானதாகிறது..
கவிதைக்கு..!!
வடுக்கள்
வலிகள் ஆயிரம் இருப்பினும்
ஒரு போதும் அதன் சாயங்களை இங்கு பூசிவிடாதே..
பின்னொரு
நாளில் அதுவே
மறையாத வடுவாகிவிடும்!
மறதி
நீரை நிறைத்திடும் பூக்கள்
குளத்தை மறைத்திடுவது பாேல..
உன்னை நினைத்திடும் மனம்
என்னை மறந்தே தொலைக்கின்றது!
இல்லாத ஒன்று
நல்ல நண்பன்
என் வாழ்வின் மிகச் சிறந்த நண்பனை..
நான் எப்போதும் கண்ணாடியில் மட்டுமே காண்பேன்!
காதல் தோல்வி
மரண வலியை கூட தாங்கி கொள்ளலாம்..
மன வலியை தான் தாங்க முடியவில்லை!
காதலை இழந்தவன்
காதலிப்பவன் அழகிய காதல் கவிதைகளை
வடித்திருக்கலாம்..
ஆனால்..
காதலை இழந்தவன் தான் அற்புத
காதல் கவிதைகளை
படைத்திருக்கிறான்!
என் ராட்சஷி
கவிதையின் ராட்சஷிக்கு
காதல் வந்து விட்டதாம்
என் மீது அல்ல என் கவிதை மீது
அவள் வெட்கத்திற்கே
என் முதல் கவிதை
முத்தமாய்..
நாணம்
என்றோ விழுந்துவிட்டேன் உனதன்பில்..
இப்படி பார்வையால் மேலும்
கொள்கிறாய். என்னை..
எவ்வளவு நேரம் தான்
படிப்பது போல நடிப்பது நானும்..! 🙃
கருத்துகள்