Cinar🍁kavithaigal. ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை.. ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை.. இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்! நாணலில் தொங்கி நிற்கும் பனித்துளி.. நீராடிவிட்டு வந்தவளின் கோதுமை கன்னத்தில் நீர்துளி! ஏக்கம் கற்பனை எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்றன.. நம் நிறைவேறா ஆசைகள்! பிம்பம் நானும் அழகாகத் தெரிந்தேன்.. அந்தக் கண்ணாடியில் நீ முகம் பார்த்த பிறகு! காந்தம் அவள் கண்களும் ஒரு வகையில் காந்தம்தான்.. என் இதய இரும்பை ஈர்ப்பதாலே! மரணமே இல்லை நிறம் பார்த்து வரும் காதல் நிரந்தரமானது இல்லை.. மனம் பார்த்து வரும் காதலுக்கு மரணமே இல்லை! போதை தான் அன்பும் ஒரு வகை போதை தான்.. அடிமையானால் ஆயுள் வரை கொல்லும்! காதல் செடி காதல் செடியில் ஒருமுறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பொய்.. எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதடி உன் ஒவ்வோர் புன்னகையிலும்.. என் காதல் ராட்சசி! இதுவும் பாவம் தான் நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட.. ஒரு வகையில் பாவம் தான்! பிடிக்காத வாழ்க்கை பிடித்தவரோடு வாழ்க்கை அமையாமல் போனாலும்.. பிடித்தவருக்கா
Cinar kavithaigal. வரலாற்றில் இன்று 2/ DEC 1409 : ஜெர்மனியில் லீப்ஜிக் பல்கலைக் கழகம் துவங்கப் பட்டது. 1697 : லண்டனில் செயின்ட் பவுல் பேராலயம் திறக்கப்பட்டது. 1784 : கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் முதன் முதல் தபால் பார்சல் சேவையை ஆரம்பித்தது. 1804 : பாரிஸில் பிரான்ஸின் பேரரசராக நெப்போலியன் பொனபார்ட் முடிசூடினார். 1843 : யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த சேதம் ஏற்பட்டது. 1848 : முதலாம் பிரான்ஸ் ஜோசப் ஆஸ்திரியாவின் பேரரசராக முடிசூடினார். 1852 : மூன்றாம் நெப்போலியன் பிரான்ஸின் மன்னராக முடிசூடினார். 1873 : நியூயார்க் டெயிலி கிராபிக் எனும் பத்திரிகையில் முதன் முதல் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. 1908 : புய் தனது இரண்டாவது வயதில் சீனாவின் பேரரசரானார். 1939 : நியூயார்க் நகரத்தின் லாகார்டியா விமான நிலையம் திறக்கப்பட்டது. 1943 : இ.உ.போர் :- இத்தாலியின் பாரி துறைமுகத்தில் இடம்பெற்ற வான்தாக்குதலில் அமெரிக்கக் கப்பல் ஒன்று உட்பட பல கப்பல்கள் மூழ்கின. 1947 : பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்க ஐநா திட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஜெருசலேமில் கலவரம் மூண்டது. 1950 : கொரியப் போர் :- வட