முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

வரலாற்றில் இன்று 30/11/2021-செவ்வாய்கிழமை

Cinar kavithaigal.

வரலாற்றில் இன்று 30/11


1630 : வெனீஸில் 16,000 பேர் பிளேக் நோயால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

1700 : ஸ்வீடனின் பன்னிரண்டாம் சார்லஸ் தலைமையில் 8,500 ராணுவத்தினர் எஸ்டோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் ரஷ்யப் படைகளை வென்றனர்.

1718 : நார்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது ஸ்வீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்லஸ் இறந்தார்.

1731 : பெய்ஜிங்கில் இடம்பெற்ற பூகம்பத்தில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர்.

1782 : அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிஸில் கையெழுத்திடப்பட்டது.

1786 : ரோமப் பேரரசர் இரண்டாம் லியோபோல்டின் தலைமையிலான டஸ்கனி, மரண தண்டனையை 
இல்லாதொழித்த முதலாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது.

1803 : ஸ்பெயின், லூசியானாவை பிரான்சுக்கு அதிகாரப்பூர்வமாக கொடுத்தது. 
20 நாட்களுக்குப் பின்னர் பிரான்ஸ் அமெரிக்காவிற்கு விற்றது.

1806 : நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றின.

1872 : முதலாவது சர்வதேசக் கால்பந்து போட்டி கிளாஸ்கோவில் ஸ்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையே இடம்பெற்றது.


1914 : சார்லி சாப்ளினின் முதல் படம் மேகிங் ஏ லிவிங் வெளியானது. 
இப்படத்தில் அவர் கைப்பிரம்பும் மீசையும் இல்லாமல் நடித்திருந்தார்.


1920 : போலந்து- லிதுவேனியா போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

1928 : சைமன் கமிஷனை எதிர்த்து லக்னோவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜவஹர்லால் நேரு தாக்கப்பட்டார்.

1936 : லண்டனில் பளிங்கு அரண்மனை தீப்பற்றி எரிந்து அழிந்தது.

1939 : ரஷ்யப் படைகள் பின்லாந்தை முற்றுகையிட்டு எல்சிங்கி மீது குண்டுகளை வீசின.

1947 : பாலஸ்தீன உள்நாட்டுப் போர் தொடங்கியது.
இது இஸ்ரேல் அரசை உருவாக்க வழிவகுத்தது.

1952 : நாகப்பட்டினம் அருகே வீசிய கடும் சூறாவளியில் 400 பேர் உயிரிழந்தனர்.

1954 : அமெரிக்கா, அலபாமா மாநிலத்தில் சிலக்கோகா என்ற இடத்தில் விண்கல் ஒன்று வீட்டின் மீது விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார்.

1966 : பிரிட்டனிடமிருந்து பார்படாஸ் விடுதலை பெற்றது.

1967 : பிரிட்டனிடம் இருந்து தெற்கு யேமன் விடுதலை அடைந்தது.

சுல்பிகர் அலி பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.

1971 : ஈரான், அரபு அமீரகத்தின் டன்பு என்ற இரண்டு தீவுகளைக் கைப்பற்றியது.

1982 : மைக்கேல் ஜாக்சனின் த்ரில்லர் ஆல்பம் வெளியிடப்பட்டது.


1988 : பங்களாதேஷில் இடம்பெற்ற சூறாவளியில் 317 பேர் உயிரிழந்தனர்.

1991 : சான்பிரான்சிஸ்கோ அருகே புயலின்போது 93 கார்கள் மற்றும் 11 லாரி விபத்து ஏற்பட்டதில் 17 பேர் இறந்தனர்.

1995 : வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.

2000 : நாசா தனது 101 வது விண்ணோடத் திட்டத்தை ஆரம்பித்தது.

2012 : காங்கோ, பிராசவில்லி நகரில் சரக்கு விமானம் 
நகரக் குடியிருப்புகளின் மீது விழுந்ததில் 32 பேர் உயிரிழந்தனர்
.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே மதிக்காதே..!!

Cinar kavithaigal.     தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே... உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே   மதிக்காதே..!! 😏 என் வாழ்வில் எனக்கு  மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன; ஆனால், அது  என் உதடுகளுக்கு தெரியாது. அது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.!!😊      - சார்லி சாப்ளின்                                எதிர்நீச்சல்  நான் பூக்களை விட முட்களை நேசிக்கின்றேன் மழைத்துளிகளை விட பெரு வெள்ளத்தை விரும்புகிறேன் வானவில்லை விட மின்னலை காதலிக்கிறேன் பனித்துளிகளை விட தீக்கதிரை அரவணைக்கிறேன் தென்றலை விட புயலை ஆதரிக்கிறேன்..-ஆம் இவைகளும் என்னைப் போன்று பிறர் நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்                                             தொடர்ச்சி   வாழ்க்கையில் முடிவு என்பது எதுவும் இல்லை போராட்டங்கள் உனதாக இருக்கப் பழகு தோல்விகள் வரு...

கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம் கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் !

Cinar kavithaigal. என்னால் முடியுமா ?என்ற எண்ணம் வேண்டாம் என்னால் முடியும் என்றே முயன்றிடு முடியும் ! உன் லட்சியத்தின் மீது விருப்பம் வேண்டும் உன் மீது உனக்கு தன்னம்பிக்கை வேண்டும் ! திட்டமிட்டு பயிற்சி செய்து வந்தால் திடமான வெற்றி உறுதியாகக் கிட்டும்  கவனத்தைக் கண்டதில் சிதற விடாமல் கவனம் செலுத்தினால் வாகை சூடலாம் ! நேரத்தை நீ மதித்து நடந்தால் நேரம் உன்னை மதித்து நடக்கும் ! சிந்தனை செயல் நோக்கம் மீதிருந்தால் சிறப்பான வெற்றி தேடி வந்து சேரும் ! கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம் கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் ! முந்தைய சாதனை வரலாறு படித்திடு முயன்று முந்தையதை முறியிடித்திடு ! அதுக்கெல்லாம் திறமை வேண்டும் தயங்காதே அதுக்கான திறமை உன்னிடம் உள்ளது ! உன்னை நீ முதலில் முழுதாக நம்பு உன்னை நீ சந்தேகிப்பது வீண் வம்பு ! நான் சாதிக்கப் பிறந்தவன் என்பதை நாளும் மனதிற்குள் சொல்லிக் கொண்டிரு ! முற்றிலும் உண்மை முயற்சி திருவினையாக்கும் முப்பால் வடித்தவர் கூற்று பொய்க்காது ! *பூ தானாக மலரவேண்டும் மாலையும் மரியாதையும் தானாக கிடைக்க வேண்டும்.! மரியாதை மரியாதை   ராஜா இரவில் மாறுவேடத்தில...

*அம்பேத்கர் எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதங்கள்*

Cinar kavithaigal. ❤️காதலர் தின சிறப்புக் கட்டுரை❤️ உன்னைப்பற்றியே ஓயாமல் நினைத்துக்கொண்டிருக்கிறேன். யஷ்வந்த் குறித்தும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். உன்னை நான் புரிந்து கொள்ளவில்லை என எண்ணிவிடாதே ரமா. உன் வேதனையை நான் உணர்கிறேன். உதிரும் இலைகளைப் போல உன் உடல்நலம் தேய்வதையும், உன் உயிர் மரம் காய்ந்து சருகாவதையும் அறிவேன். ஆனால், நான் என்ன செய்ய இயலும் ரமா? எப்போதும் விலக மறுக்கும் வறுமை ஒருபுறம் இழுக்கிறது, மற்றொருபுறம் என்னுடைய பிடிவாதமும், உறுதிமிக்கச் சபதமும் நிற்கிறது._ *அண்ணல் அம்பேத்கர், தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்*