முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

உனக்கும் எனக்குமான புரிதலில் மட்டுமே அழகாகிறது உலகம்!

Cinar kavithaigal.

உனக்கும் எனக்குமான புரிதலில் மட்டுமே அழகாகிறது உலகம்! 

                                            தேவதாஸ்
 காதலிப்பவன் அழகிய காதல் கவிதைகளைவடித்திருக்கலாம்..
ஆனால் காதலை இழந்தவன் தான் அற்புத காதல் கவிதைகளை படைத்திருக்கிறான்!              
                                            கரிசனம் 

நின் முன்னழகால்நானுடைந்தது போதாதா..
இனி கண்ணாடியுமா!?
                                                 மனைவி 
சண்டையோ..அன்போ..
உன்னிடம் இருந்து மட்டுமே எதிர்பார்க்கிறது இந்த மனசு!
                                            நினைவுகள்  
மறந்து போன நினைவுகளை 
மீண்டும் தூசி தட்டி 
எழுப்பி விடுகிறது..
எங்கிருந்தோ கேட்கும் 
நமக்குப் பிடித்த பாடல்!

பரிதவிப்பு  

அலைபேசி சிணுங்கிஅழைக்கும் போதெல்லாம்படபடத்துப் பறக்குதுபாதங்கள் இரண்டும்..அழைப்பது நீயாக இருக்கவேண்டுமென்ற ஆவலோடு!

    கண்டனம்                                             

உன்னை முழுக்க நனைத்த மழைக்கு கண்டனம் தெரிவிக்கும்..கருப்புக் குடைகள்!

                                             சாகாவரம் 
தோள் சாயும் நேரம் உயிர்மீற..
உன் ஒற்றைவிரல் போதும்..
கன்ன கதுப்பில் கோலமிட்டுஉயிர்
மீட்க..!
நினைவுகள்                                          
வெளியேஎவ்வளவு சந்தோஷமான
சூழ்நிலைகள்கொட்டி  இருந்தாலும்..

மனதுக்குள் ஒரு சோகமான 
கேட்பாரற்ற தனிமை 
ஓடிக்கொண்டுதான் இருக்கும்!
உன்  நினைவுகளோடு ..!

                                    உணர்ச்சிகள்  

நீ தொட்டால் போதும்
அழகியாக மலர்வேன்
நான்!
விரல் பத்தும்
கட்டிக்தழுவும் பொழுதில்..
விரதம் யாவும்
முறிந்து போகும்!
உன் புன்னகையால்
என் இதயத்தில்
தோரணம் கட்டினாய்..
என் வானில் 
பொன்விழா கோலம் !
                                         நேச வலி..!
பட்டும் படாமலும்,
தொட்டும் தொடாமலும்
தொடரும் நேசங்களினாலே
படர்ந்து விடுகிறது..
இதயமெங்கும் தீரா 
ஓர் நேச வலி..!
உன்னியல்பில் நீ
என்னியல்பில் நான்..
வண்டோடல்ல
தேனொடே பூ முரண்..

                                       நேசம் 

உனக்கும் எனக்குமான
புரிதலில் மட்டுமே
அழகாகிறது உலகம்!


மௌன வலி 

வெறுமையாய் ஒரு வாழ்க்கை..கனக்கிறது 
                                            இதயம்..
காரணமாய் நீ !
கத்தி சொல்லவும் 
கதறி அழவும் 
விருப்பமில்லை..
என் தகப்பனுக்கு பிடிக்காது நான் அழுதால்..!

 களவையும் கற்று 

இப்படி பேதை பெண்களை பார்த்தால்..புத்தனாய் திரியும்சில ஆண்களும்;சித்தம் கெட்டுகளவையும் கற்று மறக்கின்றேன்..உன்னை திருடிவிட்டு!


இப்போதெல்லாம்.. பிரிவுகள் ஏதும் பெரிதாக வலிப்பதேயில்லை..
பழகி விட்டதால் அல்ல..
உணர்(ற)வுகள் அனைத்தும்
என்னை விட்டு விலகி விட்டதால்!
நித்தம் கனவில் மட்டும் வந்துசெல்லவா
உன் மீது காதல்
கொண்டேன்?
பிரிவு நிகழுமென அறிந்தே..
பிரியபட்டு
பிரிவின் வலியை
தாங்கிகொள்கிறேன்.  

                                   கண்டும்காணாமல்

காணாமல் போனவர்களை தேடலாம்..
அதில் சிறிதும் தவறு இல்லை! ஆனால் கண்டும்காணாமல் போனவர்களை மட்டும் வாழ்க்கையில் நீ தேடி விடாதீர்கள்.!!

                                      குடைக்குள் மழை 

எப்படி புரிய வைப்பேன் உனக்கு நான்..
உனது கரம் தான் எனது 'கலங்கரை விளக்(கு)கம்' என்று!
வாயேன்
குடையோடு
நடை பழகலாம்
மழையோடு!
                                            நஞ்சு 
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு..
அவளது முத்தம் தவிர!
                                      வாழ்க்கை துணை 
துணை என்பது என்னோடு நிற்பவன் அல்ல..
எனக்காக வாழ்க்கை முழுவதும் நிற்பவன்!
என் மீது தவறே இருந்தாலும்..
என்னை பிறரிடம் விட்டுக் கொடுக்காமல் நிற்பவன்..
காதலுடன்!

கடைசி ஆசை 
உனக்காக நான் இருக்க வேண்டும் என்பதை விட.. 
உன்னுள் முழுக்க நான் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே..
என் ஆசை!
விதி என்று நினைத்து
விலகி விடாதே..
என் உடல் வீதி வரை
செல்லும் வரையிலும்
நீ வேண்டும்..
என் துணையாக!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே மதிக்காதே..!!

Cinar kavithaigal.     தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே... உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே   மதிக்காதே..!! 😏 என் வாழ்வில் எனக்கு  மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன; ஆனால், அது  என் உதடுகளுக்கு தெரியாது. அது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.!!😊      - சார்லி சாப்ளின்                                எதிர்நீச்சல்  நான் பூக்களை விட முட்களை நேசிக்கின்றேன் மழைத்துளிகளை விட பெரு வெள்ளத்தை விரும்புகிறேன் வானவில்லை விட மின்னலை காதலிக்கிறேன் பனித்துளிகளை விட தீக்கதிரை அரவணைக்கிறேன் தென்றலை விட புயலை ஆதரிக்கிறேன்..-ஆம் இவைகளும் என்னைப் போன்று பிறர் நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்                                             தொடர்ச்சி   வாழ்க்கையில் முடிவு என்பது எதுவும் இல்லை போராட்டங்கள் உனதாக இருக்கப் பழகு தோல்விகள் வரு...

கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம் கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் !

Cinar kavithaigal. என்னால் முடியுமா ?என்ற எண்ணம் வேண்டாம் என்னால் முடியும் என்றே முயன்றிடு முடியும் ! உன் லட்சியத்தின் மீது விருப்பம் வேண்டும் உன் மீது உனக்கு தன்னம்பிக்கை வேண்டும் ! திட்டமிட்டு பயிற்சி செய்து வந்தால் திடமான வெற்றி உறுதியாகக் கிட்டும்  கவனத்தைக் கண்டதில் சிதற விடாமல் கவனம் செலுத்தினால் வாகை சூடலாம் ! நேரத்தை நீ மதித்து நடந்தால் நேரம் உன்னை மதித்து நடக்கும் ! சிந்தனை செயல் நோக்கம் மீதிருந்தால் சிறப்பான வெற்றி தேடி வந்து சேரும் ! கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம் கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் ! முந்தைய சாதனை வரலாறு படித்திடு முயன்று முந்தையதை முறியிடித்திடு ! அதுக்கெல்லாம் திறமை வேண்டும் தயங்காதே அதுக்கான திறமை உன்னிடம் உள்ளது ! உன்னை நீ முதலில் முழுதாக நம்பு உன்னை நீ சந்தேகிப்பது வீண் வம்பு ! நான் சாதிக்கப் பிறந்தவன் என்பதை நாளும் மனதிற்குள் சொல்லிக் கொண்டிரு ! முற்றிலும் உண்மை முயற்சி திருவினையாக்கும் முப்பால் வடித்தவர் கூற்று பொய்க்காது ! *பூ தானாக மலரவேண்டும் மாலையும் மரியாதையும் தானாக கிடைக்க வேண்டும்.! மரியாதை மரியாதை   ராஜா இரவில் மாறுவேடத்தில...

*அம்பேத்கர் எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதங்கள்*

Cinar kavithaigal. ❤️காதலர் தின சிறப்புக் கட்டுரை❤️ உன்னைப்பற்றியே ஓயாமல் நினைத்துக்கொண்டிருக்கிறேன். யஷ்வந்த் குறித்தும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். உன்னை நான் புரிந்து கொள்ளவில்லை என எண்ணிவிடாதே ரமா. உன் வேதனையை நான் உணர்கிறேன். உதிரும் இலைகளைப் போல உன் உடல்நலம் தேய்வதையும், உன் உயிர் மரம் காய்ந்து சருகாவதையும் அறிவேன். ஆனால், நான் என்ன செய்ய இயலும் ரமா? எப்போதும் விலக மறுக்கும் வறுமை ஒருபுறம் இழுக்கிறது, மற்றொருபுறம் என்னுடைய பிடிவாதமும், உறுதிமிக்கச் சபதமும் நிற்கிறது._ *அண்ணல் அம்பேத்கர், தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்*