முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில் தான் உள்ளது.

Cinar kavithaigal.

நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால்

நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால்
நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன்.
அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. 
அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது. 
நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன். 
சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது. 

சில நிமிடங்களுக்கு பிறகு ,

எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.
 எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன்.
இறுதியாக, சாதித்து விட்டேன்!
 அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன். 
எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன்.

ஆனால் அந்த நபருக்கு ,

நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை.
அவரைக் கடந்த பிறகு,
 நான் அவரைக் கடப்பதிலே என்னுடைய கவனம் சென்றதால் உணர்ந்து கொண்டவை.....
1. என்னுடைய இல்லத்திற்கான வளைவில் நான் திரும்பவில்லை. 
2.என்னுடைய உள் அமைதிக்கான கவனத்தை நான் இழந்து விட்டேன்.
3.என்னைச் சுற்றி இருக்கும் இயற்கை அழகை ரசிக்க மறந்துவிட்டேன்.
4.தியானத்தை தேடிக் கொண்டிருந்த என் ஆன்மாவை இழந்து விட்டேன்.
5.தேவையற்ற அவசரத்தில், பக்க வாட்டில் இருந்த நடைப் பாதையில் 2,3 முறை கால் இடற நேர்ந்தது. ஏன் கால்கள் கூட உடைந்திருக்கும்.
அப்பொழுது தான் எனக்கு ஞானோதயம் வந்தது. நம் வாழ்க்கையிலும் இதே போலத் தானே?
 நம் உடன் பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள், நண்பர்கள், குடும்பத்தாருடன் போட்டியிட்டு அவர்களை விட முன்னேற வேண்டும், அவர்களை விட வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என பேசி நம்முடைய ஆனந்தத்தை நாமே இழந்து கொண்டிருக்கிறோம்.
நம்முடைய நேரத்தையும், ஆற்றலையும் இவ்வாறு ஓடுவதிலேயே தொலைத்து நாம் சேர வேண்டிய உண்மையான இலக்கிற்கான பாதையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஆரோக்கியமற்ற போட்டியானது ,
ஒரு முடிவில்லாமல் சுழலும் சக்கரம் போல தொடர்ந்து தொல்லை தரும்.
எப்பொழுதும் உங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு வகையில் யாராவது ஒருவர் முன்னுக்கு சென்று கொண்டிருப்பார்கள். 
உங்களை விட நல்ல வேலை.
நல்ல கார்.
வங்கியில் நிறைய பணம்.
நல்ல படிப்பு.
அழகிய மனைவி.
அழகான கணவன்.
நல்ல குழந்தைகள்.
நல்ல சுற்றுப்புற சூழ்நிலை.
நல்ல நிலை..........

ஆனால் நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால்

 நீங்கள் யாருடனும் போட்டி போடாத பொழுது, நீங்கள் நீங்களாகவே இருக்கும் பொழுது தான் நீங்கள் மிகச் சிறந்தவர் ஆகின்றீர்கள்.

சிலர் தங்கள் கவனத்தை,

அடுத்தவர்கள் எப்படி இருக்கின்றார்கள்,? 
எங்கே செல்கின்றார்கள்,? 
என்ன அணிகிறார்கள்,?
 என்ன வாகனம் ஓட்டுகிறார்கள்,? 
என்ன பேசுகிறார்கள்?..
என்பதிலேயே செலுத்துவதால் பாதுகாப்பின்மையை உணருகின்றார்கள்.
உங்களுடைய உயரம், எடை, தோற்றத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
 நீங்கள் அதை உள்ளது உள்ள படியே ஏற்று நீங்கள் ஆசிர்வாதம் பெற்றவர் என்பதை உணருங்கள்.
 கவனத்துடனும், விழிப்புணர்வுடன் ஆரோக்கியமான ஒரு வாழ்வை வாழுங்கள்.
நாம் யாருக்கும் போட்டி இல்லை.
யாரும் நமக்கு போட்டி இல்லை.
 அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.
*ஒப்பீடு செய்தலும், போட்டி மனப்பான்மையும்  நம் மன மகிழ்ச்சியை திருடுபவை. அவை உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கொல்ல கூடியது.*
மற்றவரைக் கவிழ்க்க எண்ணி நாம் கவிழ்ந்து போவது தெரியாமல் வாழ்க்கையில் நிம்மதியை இழந்துவிடுகிறோம். 
உங்களுடனே நீங்கள் போட்டியிட்டு அமைதியாக, ஆனந்தமாக, ஸ்திரமாக வாழுங்கள்.

முடிவுரை;

'வாழும் இந்த காலம் வசந்தமாக அமையும்.
வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில் தான் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே மதிக்காதே..!!

Cinar kavithaigal.     தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே... உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே   மதிக்காதே..!! 😏 என் வாழ்வில் எனக்கு  மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன; ஆனால், அது  என் உதடுகளுக்கு தெரியாது. அது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.!!😊      - சார்லி சாப்ளின்                                எதிர்நீச்சல்  நான் பூக்களை விட முட்களை நேசிக்கின்றேன் மழைத்துளிகளை விட பெரு வெள்ளத்தை விரும்புகிறேன் வானவில்லை விட மின்னலை காதலிக்கிறேன் பனித்துளிகளை விட தீக்கதிரை அரவணைக்கிறேன் தென்றலை விட புயலை ஆதரிக்கிறேன்..-ஆம் இவைகளும் என்னைப் போன்று பிறர் நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்                                             தொடர்ச்சி   வாழ்க்கையில் முடிவு என்பது எதுவும் இல்லை போராட்டங்கள் உனதாக இருக்கப் பழகு தோல்விகள் வரு...

படிக்கும் போது எல்லாம் வெட்கம் வருகிறதாம்...!!!

Cinar kavithaigal.                                                 'இலக்கு' 'இலக்கு' என்பது சிந்தனையாக மட்டுமே இல்லாது.. அடைந்தே தீர வேண்டும் என்ற 'இலட்சியமாகவும்' இருந்திடல் வேண்டும்!                                       இதயம்   தொலைந்ததைதேடலாம்.. தொலைத்ததைதேடிப் பயனில்லை..வாழ்க்கையில்...                                                 நாள்தோறும்   முடியாத பயணங்கள்வேண்டும்.. உன் கைவிரல் பிடித்தபடி!                                               கற்பனைகள்   காதலி  வேண்டுமென்பதில்லை.. கற்பனைகளே போதுமானதாகிறது.. கவி...

நான் மரணித்த பின் நீங்கள் என்னை இழப்பீர்கள் ஆனால் நான் அதை உணர முடியாது இப்போதே என்னை வந்து சந்தியுங்கள் .

Cinar kavithaigal. *நீங்கள் விரும்பினால்*  *என்னுடன் அதிக நேரம் செலவலிக்க முடியும்*, நான் இறந்தவுடன்.*  *உங்கள் கண்ணில் கண்ணீர் வழியும்*  *ஆனால் அது எனக்கு எப்படி தெரியும்*  *இப்போதே என்னுடன் அழுது விடுங்கள்*.  *நீங்கள் எனக்காக அஞ்சலி செலுத்த பூக்களை அனுப்புவீர்கள்*,  *ஆனால் என்னால் அதைப் பார்க்க முடியாது*  *அதற்கு பதிலாக இப்போதே பூக்களை அனுப்பிவையுங்கள்*  *எனக்கு பாராட்டு வார்த்தைகள் தெரிவித்து சொல்லி தூக்கம் படுவீர்கள்*  *ஆனால் நான் அதைக் கேட்க முடியாது ஆதலால்*.  *இப்போதே என்னைப் பாராட்டுங்கள்*  *என் தவறுகளை உடனேயே மன்னித்து விடுவீர்கள்*  *ஆனால் அது எனக்கு எப்படி தெரியும் ஆகவே*.....  *  இப்போதே அவற்றை மறந்துவிட்டு அதற்கு பதிலாக நான் செய்த தவறுகளை இப்போதே மறந்து விடுங்கள்.  *நான் மரணித்த பின் நீங்கள் என்னை இழப்பீர்கள்,*  *ஆனால் நான் அதை உணர முடியாது.*  *இப்போதே என்னை வந்து சந்திக்கவும்.*  *நீங்கள் விரும்பினால்*  *என்னுடன் அதிக நேரம் செலவலிக்க முடியும்*,  *அதற்கு பதிலாக இப்போதே என்னுடன் ந...