முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

நான் மரணித்த பின் நீங்கள் என்னை இழப்பீர்கள் ஆனால் நான் அதை உணர முடியாது இப்போதே என்னை வந்து சந்தியுங்கள் .

Cinar kavithaigal.

*நீங்கள் விரும்பினால்*
 *என்னுடன் அதிக நேரம் செலவலிக்க முடியும்*,

நான் இறந்தவுடன்.*
நான் மரணித்த பின் நீங்கள் என்னை இழப்பீர்கள் ஆனால் நான் அதை உணர முடியாது இப்போதே என்னை வந்து சந்தியுங்கள் .
 *உங்கள் கண்ணில் கண்ணீர் வழியும்*
 *ஆனால் அது எனக்கு எப்படி தெரியும்*
 *இப்போதே என்னுடன் அழுது விடுங்கள்*.
 *நீங்கள் எனக்காக அஞ்சலி செலுத்த பூக்களை அனுப்புவீர்கள்*,
 *ஆனால் என்னால் அதைப் பார்க்க முடியாது*
 *அதற்கு பதிலாக இப்போதே பூக்களை அனுப்பிவையுங்கள்*
 *எனக்கு பாராட்டு வார்த்தைகள் தெரிவித்து சொல்லி தூக்கம் படுவீர்கள்*
 *ஆனால் நான் அதைக் கேட்க முடியாது ஆதலால்*.
 *இப்போதே என்னைப் பாராட்டுங்கள்*
 *என் தவறுகளை உடனேயே மன்னித்து விடுவீர்கள்*
 *ஆனால் அது எனக்கு எப்படி தெரியும் ஆகவே*.....
 *  இப்போதே அவற்றை மறந்துவிட்டு அதற்கு பதிலாக நான் செய்த தவறுகளை இப்போதே மறந்து விடுங்கள்.
 *நான் மரணித்த பின் நீங்கள் என்னை இழப்பீர்கள்,*
 *ஆனால் நான் அதை உணர முடியாது.*
 *இப்போதே என்னை வந்து சந்திக்கவும்.*
 *நீங்கள் விரும்பினால்*
 *என்னுடன் அதிக நேரம் செலவலிக்க முடியும்*,
 *அதற்கு பதிலாக இப்போதே என்னுடன் நேரத்தை செலவு செய்யுங்கள்*
 *நான் இறந்து விட்டேன் என்று நீங்கள் காதால் கேட்கும்போது, ​​​​இரங்கல் தெரிவிக்க என் வீட்டிற்கு உங்கள் வழியைக் கண்டுபிடிப்பீர்கள், ஆனால் நாம் பல ஆண்டுகளாக பேசவில்லையே.
 *ஆதலால் இப்போதே என்னை சந்தித்து ஆதரவாய்,  இப்போதே எனக்குப் பதிலளிக்கவும்.*
 *உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவருடனும் நேரத்தைச் செலவிடுங்கள், மேலும் அவர்கள், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும்  அறிமுகமானவர்களை மகிழ்விக்க உங்களால் முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்யுங்கள்.*
 *அவர்களை ஸ்பெஷலாக உணருங்கள், ஏனென்றால் காலம் எப்போது அவர்களை உங்களிடமிருந்து என்றென்றும் பறிக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.*
 *நான் தனியாகத் தான் செல்ல' வேண்டும் ஆனால்* *நாம் இப்பொழுது ஒன்றாக  வாழ்ந்துவிடலாமே*.
 *நான் தனியாக 'மகிழ்ச்சி' அனுபவிக்க முடியும் ஆனால் நாம் ஒன்றாக 'கொண்டாடலாமே*'
 *என்னால் தனியாக 'சிரிக்க முடியும்' ஆனால் நாம் ஒன்றாக 'சிரிக்கலாமே'*
 *இதுதான் மனித உறவுகளின்அழகு*.
 *ஒருவருக்கொருவர் இல்லாமல் நாம் ஒன்றுமேயில்லை*
 *எனவே இணைந்திருங்கள்!!*
 *கடவுளை நேசியுங்கள் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்  கடவுளையும் அவருடைய உருவத்தையும் நீங்களும் & நானும் சேர்ந்து தரிசிக்கலாம்!!!*
வாழ்ந்திடுவோம் நாம் நூறாண்டு,!

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் மேலும் வளர்க்க கவிஞரே

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில் தான் உள்ளது.

Cinar kavithaigal. நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.  அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.  நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.  சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.  சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.  எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்!  அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.  எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன். ஆனால் அந்த நபருக்கு , நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை. அவரைக் ...

உன் விழி வழியே எனக்கான பாதை அமைத்திடுவாயோ என்னவளே.!

Cinar kavithaigal. என்னவளே நினைப்பதற்கு முன்பே என்னெதிரில் வந்து நிற்கும் பூங்காற்று நீ! உன் விழி வழியே எனக்கான பாதை  அமைத்திடுவாயோ.. அதில் வந்து  உன்னைக் காண எனக்கு அனுமதியும்  அளித்திடுவாயோ! ஒரு நொடி உன்னை காண்பதற்காக.. காத்திருக்கும்  ஒவ்வொரு நாளும்.. பல யுகங்களை போல  நகர்கிறது! விருப்பம் பிடிக்கும் என்பதே ஒரு போதைதானே.. ஆனாலும் உன் உதட்டின் வார்த்தையில்  கேட்கும் போது அதன் சுகமே தனி ஆலாதி தான்.

கோபப்படாமல் இருப்பவன் புத்திசாலி என்றால் ஒருபோதும் புத்திசாலியாக நான் இருக்கவே மாட்டேன்

Cinar kavithaigal. இதயத்தின் வலிமை  நான் என் இதயத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் ஏனென்றால் அது சிலரால் 💛விளையாடப்பட்டது, 💔ஏமாற்றப்பட்டது, 💔காயங்கள்பட்டது மற்றும் 💔உடைக்கப்பட்டது...! ஆனாலும் அது இன்னும் வேலை செய்கிறது.💓 மன்னிக்கத் தெரிந்தால் வாழ்க்கை அழகாகும்.. மறக்கத் தெரிந்தால் இந்த உலகமே அழகாகும்  அன்பின் துளி உரிமை உள்ள உறவும்.. உண்மை உள்ள அன்பும்.. நேர்மை உள்ள நட்பும்.. நம்பிக்கை உள்ள வாழ்வும்.. என்றும் விட்டுப்போவதுமில்லை... தோற்றுப்போவதுமில்லை! வசந்த காலம்   நாம் இமைக்காமல் பார்த்துக்கொண்ட நொடிகளில் நம் இதயங்களும் இடம்மாறிக்கொண்டது சாலையோர நடைப்பயிற்சியில் காலைநேர தென்றலாய் நீ… மௌனமாக பேசிட உன்னிதழ் மயங்கித்தான் போனது என் மனம்… புன்னகையுடன் ஆழமானஅன்பு   தேட விடும் அன்பை விட தேடி வரும் அன்பை நேசி....!!! அழகாக இல்லாமல் இருக்கலாம்..!! ஆனால் ஆழமான அன்பு இருக்கும்....!!💘 பாக்கியம்   வாழ்க்கையில் இவனையா  தவற விட்டோம் என..  ஒரு பெண் ஏங்கும்  பாக்கியம்  எல்லாம் ஆண்களுக்கும்  அமைந்து விடுவதில்லை  அன்புடன் ஏமாளி அன்போடு பழகுபவன் அ...