முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

அடுத்தவரை திருப்திபடுத்துவதற்காக, நீங்கள் ஒருபோதும் நடிக்க வேண்டியதில்லை...!!?

Cinar kavithaigal.
அடுத்தவரை திருப்திபடுத்துவதற்காக,  நீங்கள் ஒருபோதும் நடிக்க  வேண்டியதில்லை...!!?

இருக்கும் உறவு இறக்கும் வரையில் 
இருக்கும் பொருள் இழக்கும் வரையில், 
இரண்டின் அருமையும்
இம்மண்ணில் உள்ள மனிதர்கள்பலர் உணர்வதே இல்லை. 
இழந்த பொருளின் இடத்தை நிறைக்க
இன்னொரு பொருள் இலகுவாய் வரலாம்.. 
இறந்த உறவின் இடத்தை நிறைக்க
இயன்றவரை தேடினினும்
இழந்த உறவு இழந்தது தான்..
இந்த பிறவியில், நாம் இருக்கும் வரை, 
இருக்கும் உறவுகளுடன், 
இனிதுடன் இருப்போம்.. வாழ்க்கை குறுகியது, ஆனால் மிக அழகானது..
இனிமையானது... 

புறம் பேசுதல் என்றால் என்னவென்று அறிவீர்களா? " என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 
அதற்கு நபித்தோழர்கள், "இறைவனும் அவனது தூதருமே அறிவர் " என்று கூறினார்கள்.
"உன்னுடைய சகோதரனைப் பற்றி அவன் பிறரிடம் சொல்ல விரும்பாத ஒரு விஷயத்தை அவனைப் பற்றி நீ பிறரிடம் கூறுவது " என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அப்போது ஒருவர், "நான் கூறுகின்ற குறை என் சகோதரனிடம் உண்மையிலேயே காணப்பட்டாலுமா? " என்று கேட்டார். 
அதற்கு, "நீ அவனிடம் காணும் குறையைச் சொன்னால், புறங்கூறியவனாவாய். அவனிடம் காணப்படாததைச் சொன்னால் அவன் மீது அவதூறு கற்பித்தவனாவாய் "

தன்னைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து தன்னைப் பற்றி தெளிவாக அறிந்து , சூழ்நிலைகளை மிகக் கூர்மையாக புரிந்துகொண்டவர்கள் , சாதாரணமாக, ஆனந்த வாழ்வு வாழ்கிறார்கள். 

இதற்கு அன்பும், தூய மனமும் கொண்டவராக இருக்க வேண்டும்.

ஏனெனில் , தன்னைப் பற்றி சிந்திக்காமல், 
அடுத்தவரை குறை கூறுகிறவர் , மனக்குழப்பத்திலேயே இருந்துகொண்டு,  தனது வாழ்க்கையை வாழத் தெரியாமலிருக்கின்றனர்..

நீங்கள் விரும்பினால் ,

துயரத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் , அதற்கான வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன ;  
 அதே சமயத்தில் , நீங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் மிகக் குறைந்த வாய்ப்புகள்தான் இந்த உலகத்தில் இருக்கின்றன . 
எந்த வாய்ப்பினை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் .
தேர்ந்தெடுப்பது உங்கள் விருப்பம் . 

ஏனென்றால் , மகிழ்ச்சியை அனுபவிக்கக்கூடிய தைரியம், இங்கு மிகச்சிலருக்கு மட்டும்தான் இருக்கிறது.
பலபேர், எது கிடைத்தாலும் அதில்  சலிப்படைவார்கள் . 
எது கிடைக்கவில்லையோ, அதற்காக ஏங்குவார்கள்..
வருவதை ஏற்று, இருப்பதை உணர்ந்து அனுபவித்து, ஆனந்தமாக இருப்பதில்லை..

உங்களுக்காக நீங்கள் குறிப்பிட்ட நேரமேனும் ஒதுக்கிக் கொள்வதே மிகச் சிறந்த வாழ்வுமுறை... 

அடுத்தவர்களின் மனநிறைவுக்காக, அடுத்தவரை திருப்திபடுத்துவதற்காக, 
நீங்கள் ஒருபோதும் செயல்பட
வேண்டியதில்லை...
உங்கள் மனநிறைவை மட்டுமே முன்னிறுத்திச் செயல்படுங்கள் .



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில் தான் உள்ளது.

Cinar kavithaigal. நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.  அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.  நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.  சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.  சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.  எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்!  அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.  எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன். ஆனால் அந்த நபருக்கு , நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை. அவரைக் ...

உன் விழி வழியே எனக்கான பாதை அமைத்திடுவாயோ என்னவளே.!

Cinar kavithaigal. என்னவளே நினைப்பதற்கு முன்பே என்னெதிரில் வந்து நிற்கும் பூங்காற்று நீ! உன் விழி வழியே எனக்கான பாதை  அமைத்திடுவாயோ.. அதில் வந்து  உன்னைக் காண எனக்கு அனுமதியும்  அளித்திடுவாயோ! ஒரு நொடி உன்னை காண்பதற்காக.. காத்திருக்கும்  ஒவ்வொரு நாளும்.. பல யுகங்களை போல  நகர்கிறது! விருப்பம் பிடிக்கும் என்பதே ஒரு போதைதானே.. ஆனாலும் உன் உதட்டின் வார்த்தையில்  கேட்கும் போது அதன் சுகமே தனி ஆலாதி தான்.

கோபப்படாமல் இருப்பவன் புத்திசாலி என்றால் ஒருபோதும் புத்திசாலியாக நான் இருக்கவே மாட்டேன்

Cinar kavithaigal. இதயத்தின் வலிமை  நான் என் இதயத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் ஏனென்றால் அது சிலரால் 💛விளையாடப்பட்டது, 💔ஏமாற்றப்பட்டது, 💔காயங்கள்பட்டது மற்றும் 💔உடைக்கப்பட்டது...! ஆனாலும் அது இன்னும் வேலை செய்கிறது.💓 மன்னிக்கத் தெரிந்தால் வாழ்க்கை அழகாகும்.. மறக்கத் தெரிந்தால் இந்த உலகமே அழகாகும்  அன்பின் துளி உரிமை உள்ள உறவும்.. உண்மை உள்ள அன்பும்.. நேர்மை உள்ள நட்பும்.. நம்பிக்கை உள்ள வாழ்வும்.. என்றும் விட்டுப்போவதுமில்லை... தோற்றுப்போவதுமில்லை! வசந்த காலம்   நாம் இமைக்காமல் பார்த்துக்கொண்ட நொடிகளில் நம் இதயங்களும் இடம்மாறிக்கொண்டது சாலையோர நடைப்பயிற்சியில் காலைநேர தென்றலாய் நீ… மௌனமாக பேசிட உன்னிதழ் மயங்கித்தான் போனது என் மனம்… புன்னகையுடன் ஆழமானஅன்பு   தேட விடும் அன்பை விட தேடி வரும் அன்பை நேசி....!!! அழகாக இல்லாமல் இருக்கலாம்..!! ஆனால் ஆழமான அன்பு இருக்கும்....!!💘 பாக்கியம்   வாழ்க்கையில் இவனையா  தவற விட்டோம் என..  ஒரு பெண் ஏங்கும்  பாக்கியம்  எல்லாம் ஆண்களுக்கும்  அமைந்து விடுவதில்லை  அன்புடன் ஏமாளி அன்போடு பழகுபவன் அ...