முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

அடுத்தவரை திருப்திபடுத்துவதற்காக, நீங்கள் ஒருபோதும் நடிக்க வேண்டியதில்லை...!!?

Cinar kavithaigal.
அடுத்தவரை திருப்திபடுத்துவதற்காக,  நீங்கள் ஒருபோதும் நடிக்க  வேண்டியதில்லை...!!?

இருக்கும் உறவு இறக்கும் வரையில் 
இருக்கும் பொருள் இழக்கும் வரையில், 
இரண்டின் அருமையும்
இம்மண்ணில் உள்ள மனிதர்கள்பலர் உணர்வதே இல்லை. 
இழந்த பொருளின் இடத்தை நிறைக்க
இன்னொரு பொருள் இலகுவாய் வரலாம்.. 
இறந்த உறவின் இடத்தை நிறைக்க
இயன்றவரை தேடினினும்
இழந்த உறவு இழந்தது தான்..
இந்த பிறவியில், நாம் இருக்கும் வரை, 
இருக்கும் உறவுகளுடன், 
இனிதுடன் இருப்போம்.. வாழ்க்கை குறுகியது, ஆனால் மிக அழகானது..
இனிமையானது... 

புறம் பேசுதல் என்றால் என்னவென்று அறிவீர்களா? " என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 
அதற்கு நபித்தோழர்கள், "இறைவனும் அவனது தூதருமே அறிவர் " என்று கூறினார்கள்.
"உன்னுடைய சகோதரனைப் பற்றி அவன் பிறரிடம் சொல்ல விரும்பாத ஒரு விஷயத்தை அவனைப் பற்றி நீ பிறரிடம் கூறுவது " என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அப்போது ஒருவர், "நான் கூறுகின்ற குறை என் சகோதரனிடம் உண்மையிலேயே காணப்பட்டாலுமா? " என்று கேட்டார். 
அதற்கு, "நீ அவனிடம் காணும் குறையைச் சொன்னால், புறங்கூறியவனாவாய். அவனிடம் காணப்படாததைச் சொன்னால் அவன் மீது அவதூறு கற்பித்தவனாவாய் "

தன்னைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து தன்னைப் பற்றி தெளிவாக அறிந்து , சூழ்நிலைகளை மிகக் கூர்மையாக புரிந்துகொண்டவர்கள் , சாதாரணமாக, ஆனந்த வாழ்வு வாழ்கிறார்கள். 

இதற்கு அன்பும், தூய மனமும் கொண்டவராக இருக்க வேண்டும்.

ஏனெனில் , தன்னைப் பற்றி சிந்திக்காமல், 
அடுத்தவரை குறை கூறுகிறவர் , மனக்குழப்பத்திலேயே இருந்துகொண்டு,  தனது வாழ்க்கையை வாழத் தெரியாமலிருக்கின்றனர்..

நீங்கள் விரும்பினால் ,

துயரத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் , அதற்கான வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன ;  
 அதே சமயத்தில் , நீங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் மிகக் குறைந்த வாய்ப்புகள்தான் இந்த உலகத்தில் இருக்கின்றன . 
எந்த வாய்ப்பினை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் .
தேர்ந்தெடுப்பது உங்கள் விருப்பம் . 

ஏனென்றால் , மகிழ்ச்சியை அனுபவிக்கக்கூடிய தைரியம், இங்கு மிகச்சிலருக்கு மட்டும்தான் இருக்கிறது.
பலபேர், எது கிடைத்தாலும் அதில்  சலிப்படைவார்கள் . 
எது கிடைக்கவில்லையோ, அதற்காக ஏங்குவார்கள்..
வருவதை ஏற்று, இருப்பதை உணர்ந்து அனுபவித்து, ஆனந்தமாக இருப்பதில்லை..

உங்களுக்காக நீங்கள் குறிப்பிட்ட நேரமேனும் ஒதுக்கிக் கொள்வதே மிகச் சிறந்த வாழ்வுமுறை... 

அடுத்தவர்களின் மனநிறைவுக்காக, அடுத்தவரை திருப்திபடுத்துவதற்காக, 
நீங்கள் ஒருபோதும் செயல்பட
வேண்டியதில்லை...
உங்கள் மனநிறைவை மட்டுமே முன்னிறுத்திச் செயல்படுங்கள் .



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே மதிக்காதே..!!

Cinar kavithaigal.     தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே... உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே   மதிக்காதே..!! 😏 என் வாழ்வில் எனக்கு  மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன; ஆனால், அது  என் உதடுகளுக்கு தெரியாது. அது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.!!😊      - சார்லி சாப்ளின்                                எதிர்நீச்சல்  நான் பூக்களை விட முட்களை நேசிக்கின்றேன் மழைத்துளிகளை விட பெரு வெள்ளத்தை விரும்புகிறேன் வானவில்லை விட மின்னலை காதலிக்கிறேன் பனித்துளிகளை விட தீக்கதிரை அரவணைக்கிறேன் தென்றலை விட புயலை ஆதரிக்கிறேன்..-ஆம் இவைகளும் என்னைப் போன்று பிறர் நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்                                             தொடர்ச்சி   வாழ்க்கையில் முடிவு என்பது எதுவும் இல்லை போராட்டங்கள் உனதாக இருக்கப் பழகு தோல்விகள் வரு...

கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம் கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் !

Cinar kavithaigal. என்னால் முடியுமா ?என்ற எண்ணம் வேண்டாம் என்னால் முடியும் என்றே முயன்றிடு முடியும் ! உன் லட்சியத்தின் மீது விருப்பம் வேண்டும் உன் மீது உனக்கு தன்னம்பிக்கை வேண்டும் ! திட்டமிட்டு பயிற்சி செய்து வந்தால் திடமான வெற்றி உறுதியாகக் கிட்டும்  கவனத்தைக் கண்டதில் சிதற விடாமல் கவனம் செலுத்தினால் வாகை சூடலாம் ! நேரத்தை நீ மதித்து நடந்தால் நேரம் உன்னை மதித்து நடக்கும் ! சிந்தனை செயல் நோக்கம் மீதிருந்தால் சிறப்பான வெற்றி தேடி வந்து சேரும் ! கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம் கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் ! முந்தைய சாதனை வரலாறு படித்திடு முயன்று முந்தையதை முறியிடித்திடு ! அதுக்கெல்லாம் திறமை வேண்டும் தயங்காதே அதுக்கான திறமை உன்னிடம் உள்ளது ! உன்னை நீ முதலில் முழுதாக நம்பு உன்னை நீ சந்தேகிப்பது வீண் வம்பு ! நான் சாதிக்கப் பிறந்தவன் என்பதை நாளும் மனதிற்குள் சொல்லிக் கொண்டிரு ! முற்றிலும் உண்மை முயற்சி திருவினையாக்கும் முப்பால் வடித்தவர் கூற்று பொய்க்காது ! *பூ தானாக மலரவேண்டும் மாலையும் மரியாதையும் தானாக கிடைக்க வேண்டும்.! மரியாதை மரியாதை   ராஜா இரவில் மாறுவேடத்தில...

*அம்பேத்கர் எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதங்கள்*

Cinar kavithaigal. ❤️காதலர் தின சிறப்புக் கட்டுரை❤️ உன்னைப்பற்றியே ஓயாமல் நினைத்துக்கொண்டிருக்கிறேன். யஷ்வந்த் குறித்தும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். உன்னை நான் புரிந்து கொள்ளவில்லை என எண்ணிவிடாதே ரமா. உன் வேதனையை நான் உணர்கிறேன். உதிரும் இலைகளைப் போல உன் உடல்நலம் தேய்வதையும், உன் உயிர் மரம் காய்ந்து சருகாவதையும் அறிவேன். ஆனால், நான் என்ன செய்ய இயலும் ரமா? எப்போதும் விலக மறுக்கும் வறுமை ஒருபுறம் இழுக்கிறது, மற்றொருபுறம் என்னுடைய பிடிவாதமும், உறுதிமிக்கச் சபதமும் நிற்கிறது._ *அண்ணல் அம்பேத்கர், தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்*