முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

உன் அடையாளம் நீயென்றால் உன் இலக்கை அடைய விவேகமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்

SUBBIAH PATTURAJAN வருங்காலத்தைப் பற்றி வருடங்களாய்  யோசிப்பதை விட நிகழ்காலத்தைப் பற்றி நிமிடங்கள் சிந்தித்தால்  போதும். எப்படி என்றால் நன்றாக நடப்பதற்கு முன் ஒரு குழந்தை விழுவதைப் போல, தோல்விகள் அனைத்தும் வெற்றிப்படிகளே ஆகவே, தோல்விகளைக் கண்டு ஏமாற்றமோ,  மனத்தளர்ச்சியோ அடையத் தேவையில்லை ஆகையால் வெற்றி என்பது அதிர்ஷ்டம் கிடையாது.  அதிர்ஷ்டத்தால் ஒருவருக்கு வெற்றி கிடைப்பதில்லை திட்டமிட்டுத் தன் திறமையை வளர்த்து  முன்னேறிச் செல்லும் ஒருவருக்குத் தான் வெற்றி கிடைக்கிறது அதிர்ஷ்டத்தால் கிடைத்த எந்த வெற்றியாக இருந்தாலும் நிலைப்பதில்லை உன் அடையாளம் நீயென்றால் உன் இலக்கை அடைய இலட்சம் நோக்கி ஓயாமல் இலட்சியத்தை நோக்கி பாய்ந்துவிடு  வேகமாக செயல்படுவதை விட விவேகமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் 

அடுத்தவரை திருப்திபடுத்துவதற்காக, நீங்கள் ஒருபோதும் நடிக்க வேண்டியதில்லை...!!?

Cinar kavithaigal.
அடுத்தவரை திருப்திபடுத்துவதற்காக,  நீங்கள் ஒருபோதும் நடிக்க  வேண்டியதில்லை...!!?

இருக்கும் உறவு இறக்கும் வரையில் 
இருக்கும் பொருள் இழக்கும் வரையில், 
இரண்டின் அருமையும்
இம்மண்ணில் உள்ள மனிதர்கள்பலர் உணர்வதே இல்லை. 
இழந்த பொருளின் இடத்தை நிறைக்க
இன்னொரு பொருள் இலகுவாய் வரலாம்.. 
இறந்த உறவின் இடத்தை நிறைக்க
இயன்றவரை தேடினினும்
இழந்த உறவு இழந்தது தான்..
இந்த பிறவியில், நாம் இருக்கும் வரை, 
இருக்கும் உறவுகளுடன், 
இனிதுடன் இருப்போம்.. வாழ்க்கை குறுகியது, ஆனால் மிக அழகானது..
இனிமையானது... 

புறம் பேசுதல் என்றால் என்னவென்று அறிவீர்களா? " என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 
அதற்கு நபித்தோழர்கள், "இறைவனும் அவனது தூதருமே அறிவர் " என்று கூறினார்கள்.
"உன்னுடைய சகோதரனைப் பற்றி அவன் பிறரிடம் சொல்ல விரும்பாத ஒரு விஷயத்தை அவனைப் பற்றி நீ பிறரிடம் கூறுவது " என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அப்போது ஒருவர், "நான் கூறுகின்ற குறை என் சகோதரனிடம் உண்மையிலேயே காணப்பட்டாலுமா? " என்று கேட்டார். 
அதற்கு, "நீ அவனிடம் காணும் குறையைச் சொன்னால், புறங்கூறியவனாவாய். அவனிடம் காணப்படாததைச் சொன்னால் அவன் மீது அவதூறு கற்பித்தவனாவாய் "

தன்னைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து தன்னைப் பற்றி தெளிவாக அறிந்து , சூழ்நிலைகளை மிகக் கூர்மையாக புரிந்துகொண்டவர்கள் , சாதாரணமாக, ஆனந்த வாழ்வு வாழ்கிறார்கள். 

இதற்கு அன்பும், தூய மனமும் கொண்டவராக இருக்க வேண்டும்.

ஏனெனில் , தன்னைப் பற்றி சிந்திக்காமல், 
அடுத்தவரை குறை கூறுகிறவர் , மனக்குழப்பத்திலேயே இருந்துகொண்டு,  தனது வாழ்க்கையை வாழத் தெரியாமலிருக்கின்றனர்..

நீங்கள் விரும்பினால் ,

துயரத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் , அதற்கான வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன ;  
 அதே சமயத்தில் , நீங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் மிகக் குறைந்த வாய்ப்புகள்தான் இந்த உலகத்தில் இருக்கின்றன . 
எந்த வாய்ப்பினை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் .
தேர்ந்தெடுப்பது உங்கள் விருப்பம் . 

ஏனென்றால் , மகிழ்ச்சியை அனுபவிக்கக்கூடிய தைரியம், இங்கு மிகச்சிலருக்கு மட்டும்தான் இருக்கிறது.
பலபேர், எது கிடைத்தாலும் அதில்  சலிப்படைவார்கள் . 
எது கிடைக்கவில்லையோ, அதற்காக ஏங்குவார்கள்..
வருவதை ஏற்று, இருப்பதை உணர்ந்து அனுபவித்து, ஆனந்தமாக இருப்பதில்லை..

உங்களுக்காக நீங்கள் குறிப்பிட்ட நேரமேனும் ஒதுக்கிக் கொள்வதே மிகச் சிறந்த வாழ்வுமுறை... 

அடுத்தவர்களின் மனநிறைவுக்காக, அடுத்தவரை திருப்திபடுத்துவதற்காக, 
நீங்கள் ஒருபோதும் செயல்பட
வேண்டியதில்லை...
உங்கள் மனநிறைவை மட்டுமே முன்னிறுத்திச் செயல்படுங்கள் .



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே மதிக்காதே..!!

Cinar kavithaigal.     தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே... உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே   மதிக்காதே..!! 😏 என் வாழ்வில் எனக்கு  மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன; ஆனால், அது  என் உதடுகளுக்கு தெரியாது. அது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.!!😊      - சார்லி சாப்ளின்                                எதிர்நீச்சல்  நான் பூக்களை விட முட்களை நேசிக்கின்றேன் மழைத்துளிகளை விட பெரு வெள்ளத்தை விரும்புகிறேன் வானவில்லை விட மின்னலை காதலிக்கிறேன் பனித்துளிகளை விட தீக்கதிரை அரவணைக்கிறேன் தென்றலை விட புயலை ஆதரிக்கிறேன்..-ஆம் இவைகளும் என்னைப் போன்று பிறர் நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்                                             தொடர்ச்சி   வாழ்க்கையில் முடிவு என்பது எதுவும் இல்லை போராட்டங்கள் உனதாக இருக்கப் பழகு தோல்விகள் வரு...

படிக்கும் போது எல்லாம் வெட்கம் வருகிறதாம்...!!!

Cinar kavithaigal.                                                 'இலக்கு' 'இலக்கு' என்பது சிந்தனையாக மட்டுமே இல்லாது.. அடைந்தே தீர வேண்டும் என்ற 'இலட்சியமாகவும்' இருந்திடல் வேண்டும்!                                       இதயம்   தொலைந்ததைதேடலாம்.. தொலைத்ததைதேடிப் பயனில்லை..வாழ்க்கையில்...                                                 நாள்தோறும்   முடியாத பயணங்கள்வேண்டும்.. உன் கைவிரல் பிடித்தபடி!                                               கற்பனைகள்   காதலி  வேண்டுமென்பதில்லை.. கற்பனைகளே போதுமானதாகிறது.. கவி...

Today is November 25 in history

  Cinar kavithaigal. வரலாற்றில் இன்று 25/11-வியாழன் 885 : வைக்கிங் படையினர் 300 கப்பல்களில் செய்ன் ஆற்றில் சென்று பாரிஸைக் கைப்பற்றினர். 1034 : ஸ்காட்லாந்து மன்னர் மெல் கொலுயிம் இறந்தார். அவரது பேரன் டென்காட் புதிய மன்னராக முடிசூடினான். 1343 : டெரீனியன் கடலில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் நாபொலி உட்பட பல நகரங்கள் சேதமடைந்தன. 1667 : காகசஸ் பகுதியில் ஷேமாகா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். 1703 : பிரிட்டனில் இடம்பெற்ற சூறாவளியில் 9 ஆயிரம் பேர் பலியானார்கள். 1759 : பெய்ரூட், டமாஸ்கஸ் நகரங்களை நிலநடுக்கம் தாக்கியதில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.  1833 : சுமத்ராவில் 8.7 ரிக்டர் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது. 1839 : பலத்த சூறாவளியால் ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றிலும் சேதமடைந்தது.  30,000 பேர் வரை உயிரிழந்தனர். 1866 : அலகாபாத் உயர்நீதிமன்றம் 5 நீதிபதிகளுடன் துவக்கப்பட்டது. 1867 : ஆல்பிரட் நோபல், டைனமைட்டுக்கு காப்புரிமம் பெற்றார். 1905 : டென்மார்க் இளவரசர் கார்ல், ஏழாம் ஹா...