முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

வரலாற்றில் இன்று 2/DEC

Cinar kavithaigal.

வரலாற்றில் இன்று 2/ DEC

வரலாற்றில் இன்று 2/Dec

1409 : ஜெர்மனியில் லீப்ஜிக் பல்கலைக் கழகம் துவங்கப் பட்டது.

1697 : லண்டனில் செயின்ட் பவுல் பேராலயம் திறக்கப்பட்டது.

1784 : கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் முதன் முதல் தபால் பார்சல் சேவையை ஆரம்பித்தது.

1804 : பாரிஸில் பிரான்ஸின் பேரரசராக நெப்போலியன் பொனபார்ட் முடிசூடினார்.

1843 : யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.

1848 : முதலாம் பிரான்ஸ் ஜோசப் ஆஸ்திரியாவின் 
பேரரசராக முடிசூடினார்.

1852 : மூன்றாம் நெப்போலியன் பிரான்ஸின் மன்னராக முடிசூடினார்.

1873 : நியூயார்க் டெயிலி கிராபிக் எனும் பத்திரிகையில் 
முதன் முதல் புகைப்படத்துடன் செய்தி வெளியானது.

1908 : புய் தனது இரண்டாவது வயதில் சீனாவின் பேரரசரானார்.

1939 : நியூயார்க் நகரத்தின் லாகார்டியா விமான நிலையம் திறக்கப்பட்டது.

1943 : இ.உ.போர் :- இத்தாலியின் பாரி துறைமுகத்தில் இடம்பெற்ற வான்தாக்குதலில் அமெரிக்கக் கப்பல் ஒன்று உட்பட பல கப்பல்கள் மூழ்கின.

1947 : பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்க ஐநா திட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஜெருசலேமில் கலவரம் மூண்டது.

1950 : கொரியப் போர் :- வட கொரியாவில் இருந்து ஐநா படையினர் முற்றிலும் விலக்கப்பட்டனர்.

1954 : சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாதுகாப்பு
ஒப்பந்தம் வாஷிங்டனில் கையெழுத்திடப் பட்டது.

1956 : பிடல் காஸ்ட்ரோ சேகுவேரா மற்றும் ஆதரவாளர்களும் கியூபா புரட்சியை முன்னெடுப்பதற்காக கிரான்மா என்ற 
படகில் கியூபாவை சென்றடைந்தனர்.

1971 : அபுதாபி, அஜ்மான், புஜைரா, ஷார்ஜா, துபாய்,
உம்அல்-குவைன் ஆகிய நாடுகள் அரபு அமீரகம் என்ற பெயரில் இணைந்தன.

1976 : பிடல்காஸ்ட்ரோ கியூபாவின் அதிபராகப் 
பதவியேற்றார்.

1980 : எல் சல்வடோரில் 4 அமெரிக்க மிஷனரிகள்
பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

1984 : முல்லைத் தீவு, ஒதியமலை கிராமத்தில் இலங்கை ராணுவத்தினரால் 32 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1982 : முதலாவது செயற்கை இதயம் உட்டா பல்கலைக்கழக மையத்தில் பார்னி கிளார்க் என்பவருக்கு பொருத்தப்பட்டது.

1991 : இந்தியாவில் முதன் முதலாக நாடாளுமன்ற கேள்வி நேர நிகழ்ச்சி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.

1993 : கொலம்பியாவின் போதை பொருள் கடத்தல் தலைவன் பப்லோ எஸ்கோபர் மெடலின் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியைத் திருத்தும் நோக்கோடு நாசாவின் எண்டெவர் விண்ணோடம் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1995 : யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை ராணுவத்திடம் வீழ்ச்சி அடைந்தது.

2002 : இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் 
இடையே பேச்சுவார்த்தைகள் ஒஸ்லோவில் ஆரம்பமாயின.

2006 : பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் 
நாட்டுடமை ஆக்கப்பட்டன.

2016 : கலிபோர்னியா, ஓக்லாண்ட் கிடங்கில் இடம்பெற்ற தீவிபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில் தான் உள்ளது.

Cinar kavithaigal. நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.  அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.  நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.  சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.  சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.  எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்!  அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.  எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன். ஆனால் அந்த நபருக்கு , நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை. அவரைக் ...

உன் விழி வழியே எனக்கான பாதை அமைத்திடுவாயோ என்னவளே.!

Cinar kavithaigal. என்னவளே நினைப்பதற்கு முன்பே என்னெதிரில் வந்து நிற்கும் பூங்காற்று நீ! உன் விழி வழியே எனக்கான பாதை  அமைத்திடுவாயோ.. அதில் வந்து  உன்னைக் காண எனக்கு அனுமதியும்  அளித்திடுவாயோ! ஒரு நொடி உன்னை காண்பதற்காக.. காத்திருக்கும்  ஒவ்வொரு நாளும்.. பல யுகங்களை போல  நகர்கிறது! விருப்பம் பிடிக்கும் என்பதே ஒரு போதைதானே.. ஆனாலும் உன் உதட்டின் வார்த்தையில்  கேட்கும் போது அதன் சுகமே தனி ஆலாதி தான்.

கோபப்படாமல் இருப்பவன் புத்திசாலி என்றால் ஒருபோதும் புத்திசாலியாக நான் இருக்கவே மாட்டேன்

Cinar kavithaigal. இதயத்தின் வலிமை  நான் என் இதயத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் ஏனென்றால் அது சிலரால் 💛விளையாடப்பட்டது, 💔ஏமாற்றப்பட்டது, 💔காயங்கள்பட்டது மற்றும் 💔உடைக்கப்பட்டது...! ஆனாலும் அது இன்னும் வேலை செய்கிறது.💓 மன்னிக்கத் தெரிந்தால் வாழ்க்கை அழகாகும்.. மறக்கத் தெரிந்தால் இந்த உலகமே அழகாகும்  அன்பின் துளி உரிமை உள்ள உறவும்.. உண்மை உள்ள அன்பும்.. நேர்மை உள்ள நட்பும்.. நம்பிக்கை உள்ள வாழ்வும்.. என்றும் விட்டுப்போவதுமில்லை... தோற்றுப்போவதுமில்லை! வசந்த காலம்   நாம் இமைக்காமல் பார்த்துக்கொண்ட நொடிகளில் நம் இதயங்களும் இடம்மாறிக்கொண்டது சாலையோர நடைப்பயிற்சியில் காலைநேர தென்றலாய் நீ… மௌனமாக பேசிட உன்னிதழ் மயங்கித்தான் போனது என் மனம்… புன்னகையுடன் ஆழமானஅன்பு   தேட விடும் அன்பை விட தேடி வரும் அன்பை நேசி....!!! அழகாக இல்லாமல் இருக்கலாம்..!! ஆனால் ஆழமான அன்பு இருக்கும்....!!💘 பாக்கியம்   வாழ்க்கையில் இவனையா  தவற விட்டோம் என..  ஒரு பெண் ஏங்கும்  பாக்கியம்  எல்லாம் ஆண்களுக்கும்  அமைந்து விடுவதில்லை  அன்புடன் ஏமாளி அன்போடு பழகுபவன் அ...