முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

வரலாற்றில் இன்று 2/DEC

Cinar kavithaigal.

வரலாற்றில் இன்று 2/ DEC

வரலாற்றில் இன்று 2/Dec

1409 : ஜெர்மனியில் லீப்ஜிக் பல்கலைக் கழகம் துவங்கப் பட்டது.

1697 : லண்டனில் செயின்ட் பவுல் பேராலயம் திறக்கப்பட்டது.

1784 : கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் முதன் முதல் தபால் பார்சல் சேவையை ஆரம்பித்தது.

1804 : பாரிஸில் பிரான்ஸின் பேரரசராக நெப்போலியன் பொனபார்ட் முடிசூடினார்.

1843 : யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.

1848 : முதலாம் பிரான்ஸ் ஜோசப் ஆஸ்திரியாவின் 
பேரரசராக முடிசூடினார்.

1852 : மூன்றாம் நெப்போலியன் பிரான்ஸின் மன்னராக முடிசூடினார்.

1873 : நியூயார்க் டெயிலி கிராபிக் எனும் பத்திரிகையில் 
முதன் முதல் புகைப்படத்துடன் செய்தி வெளியானது.

1908 : புய் தனது இரண்டாவது வயதில் சீனாவின் பேரரசரானார்.

1939 : நியூயார்க் நகரத்தின் லாகார்டியா விமான நிலையம் திறக்கப்பட்டது.

1943 : இ.உ.போர் :- இத்தாலியின் பாரி துறைமுகத்தில் இடம்பெற்ற வான்தாக்குதலில் அமெரிக்கக் கப்பல் ஒன்று உட்பட பல கப்பல்கள் மூழ்கின.

1947 : பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்க ஐநா திட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஜெருசலேமில் கலவரம் மூண்டது.

1950 : கொரியப் போர் :- வட கொரியாவில் இருந்து ஐநா படையினர் முற்றிலும் விலக்கப்பட்டனர்.

1954 : சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாதுகாப்பு
ஒப்பந்தம் வாஷிங்டனில் கையெழுத்திடப் பட்டது.

1956 : பிடல் காஸ்ட்ரோ சேகுவேரா மற்றும் ஆதரவாளர்களும் கியூபா புரட்சியை முன்னெடுப்பதற்காக கிரான்மா என்ற 
படகில் கியூபாவை சென்றடைந்தனர்.

1971 : அபுதாபி, அஜ்மான், புஜைரா, ஷார்ஜா, துபாய்,
உம்அல்-குவைன் ஆகிய நாடுகள் அரபு அமீரகம் என்ற பெயரில் இணைந்தன.

1976 : பிடல்காஸ்ட்ரோ கியூபாவின் அதிபராகப் 
பதவியேற்றார்.

1980 : எல் சல்வடோரில் 4 அமெரிக்க மிஷனரிகள்
பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

1984 : முல்லைத் தீவு, ஒதியமலை கிராமத்தில் இலங்கை ராணுவத்தினரால் 32 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1982 : முதலாவது செயற்கை இதயம் உட்டா பல்கலைக்கழக மையத்தில் பார்னி கிளார்க் என்பவருக்கு பொருத்தப்பட்டது.

1991 : இந்தியாவில் முதன் முதலாக நாடாளுமன்ற கேள்வி நேர நிகழ்ச்சி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.

1993 : கொலம்பியாவின் போதை பொருள் கடத்தல் தலைவன் பப்லோ எஸ்கோபர் மெடலின் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியைத் திருத்தும் நோக்கோடு நாசாவின் எண்டெவர் விண்ணோடம் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1995 : யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை ராணுவத்திடம் வீழ்ச்சி அடைந்தது.

2002 : இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் 
இடையே பேச்சுவார்த்தைகள் ஒஸ்லோவில் ஆரம்பமாயின.

2006 : பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் 
நாட்டுடமை ஆக்கப்பட்டன.

2016 : கலிபோர்னியா, ஓக்லாண்ட் கிடங்கில் இடம்பெற்ற தீவிபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே மதிக்காதே..!!

Cinar kavithaigal.     தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே... உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே   மதிக்காதே..!! 😏 என் வாழ்வில் எனக்கு  மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன; ஆனால், அது  என் உதடுகளுக்கு தெரியாது. அது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.!!😊      - சார்லி சாப்ளின்                                எதிர்நீச்சல்  நான் பூக்களை விட முட்களை நேசிக்கின்றேன் மழைத்துளிகளை விட பெரு வெள்ளத்தை விரும்புகிறேன் வானவில்லை விட மின்னலை காதலிக்கிறேன் பனித்துளிகளை விட தீக்கதிரை அரவணைக்கிறேன் தென்றலை விட புயலை ஆதரிக்கிறேன்..-ஆம் இவைகளும் என்னைப் போன்று பிறர் நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்                                             தொடர்ச்சி   வாழ்க்கையில் முடிவு என்பது எதுவும் இல்லை போராட்டங்கள் உனதாக இருக்கப் பழகு தோல்விகள் வரு...

கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம் கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் !

Cinar kavithaigal. என்னால் முடியுமா ?என்ற எண்ணம் வேண்டாம் என்னால் முடியும் என்றே முயன்றிடு முடியும் ! உன் லட்சியத்தின் மீது விருப்பம் வேண்டும் உன் மீது உனக்கு தன்னம்பிக்கை வேண்டும் ! திட்டமிட்டு பயிற்சி செய்து வந்தால் திடமான வெற்றி உறுதியாகக் கிட்டும்  கவனத்தைக் கண்டதில் சிதற விடாமல் கவனம் செலுத்தினால் வாகை சூடலாம் ! நேரத்தை நீ மதித்து நடந்தால் நேரம் உன்னை மதித்து நடக்கும் ! சிந்தனை செயல் நோக்கம் மீதிருந்தால் சிறப்பான வெற்றி தேடி வந்து சேரும் ! கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம் கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் ! முந்தைய சாதனை வரலாறு படித்திடு முயன்று முந்தையதை முறியிடித்திடு ! அதுக்கெல்லாம் திறமை வேண்டும் தயங்காதே அதுக்கான திறமை உன்னிடம் உள்ளது ! உன்னை நீ முதலில் முழுதாக நம்பு உன்னை நீ சந்தேகிப்பது வீண் வம்பு ! நான் சாதிக்கப் பிறந்தவன் என்பதை நாளும் மனதிற்குள் சொல்லிக் கொண்டிரு ! முற்றிலும் உண்மை முயற்சி திருவினையாக்கும் முப்பால் வடித்தவர் கூற்று பொய்க்காது ! *பூ தானாக மலரவேண்டும் மாலையும் மரியாதையும் தானாக கிடைக்க வேண்டும்.! மரியாதை மரியாதை   ராஜா இரவில் மாறுவேடத்தில...

*அம்பேத்கர் எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதங்கள்*

Cinar kavithaigal. ❤️காதலர் தின சிறப்புக் கட்டுரை❤️ உன்னைப்பற்றியே ஓயாமல் நினைத்துக்கொண்டிருக்கிறேன். யஷ்வந்த் குறித்தும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். உன்னை நான் புரிந்து கொள்ளவில்லை என எண்ணிவிடாதே ரமா. உன் வேதனையை நான் உணர்கிறேன். உதிரும் இலைகளைப் போல உன் உடல்நலம் தேய்வதையும், உன் உயிர் மரம் காய்ந்து சருகாவதையும் அறிவேன். ஆனால், நான் என்ன செய்ய இயலும் ரமா? எப்போதும் விலக மறுக்கும் வறுமை ஒருபுறம் இழுக்கிறது, மற்றொருபுறம் என்னுடைய பிடிவாதமும், உறுதிமிக்கச் சபதமும் நிற்கிறது._ *அண்ணல் அம்பேத்கர், தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்*