முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள்.

Cinar kavithaigal.

வள்ளலாரின்_அமுதமொழிகள்.

வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள்.
*பிறருடைய பசியை அகற்றுவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் முடிந்துவிடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களைக் களையவும் ஒவ்வொரு வரும் முன்வர வேண்டும்.*
*கற்பனைகள் அனைத்தையும் கடந்தவன் இறைவன். அத்தகைய ஒருவனைக் கற்பனைக்குள் கொண்டுவரமுடியாது.*
*வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.*
*பாவச் செயல்களைச் செய்யாமலும், தீயவர்கள் கூட்டத்தில் பழகாமலும், திருவருளைச் சிந்தித்து, அவர்கள் தரத்திற்கு ஒத்த தெய்வங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தால் கவலை நீங்கும்.*
*சொல்லாலும், பொருளாலும், அறிவாலும் துணிந்து அளக்க முடியாதவன் இறைவன். அவரவர் முயற்சிகளுக்கு ஏற்ப அரியவ„யும் பெரியவ„யும் அவன் விளங்குவான்.*

ஒருவரைப் பார்த்தாலே

*யாரையும் கடுகடுத்த நோக்குடன் பார்க்க வேண்டாம். அதுபோல், பல்லாயிரம் சொற்களை உபசாரமாக பேசுவதை விட, முகமலர்ச்சியுடன் ஒருவரைப் பார்த்தாலே நம்மைச் சந்திப்பவர் மகிழ்வார்.*
*நெல் பயிருக்கு நீர் பாய்ச்சுவோரையும், விழியிழந்தோருக்கு ஊன்றுகோல் வழங்குபவரையும், இரவில் வந்தவர்க்கு இடம் கொடுப்போரையும், அஞ்சி வந்து அடுத்தவர்க்கு அபயம் கொடுப்போரையும், பசியினால் தவிப்போர்க்கு அன்னம் கொடுப்போரையும், சேற்றில் விழுந்து திகைக்கின்றோர்க்குக் கைகொடுப்போரையும், ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டோரைக் கரையேற்றுவோரையும், சத்திரம் கட்டித்தருமம் செய்வோரையும், குரு தரிசனம், ஞானிகள் தரிசனம், சிவதரிசனம் செய்வோரையும் ஒரு நாளும் தடுக்கக்கூடாது.*

அறம் என்பது 

*பசியில் துன்புற்று, கன்னத்தில் கைகளை வைத்துக் கொண்டு, கண்களில் நீர் கலங்க, வருந்துகின்ற ஏழைகளுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களின் வருத்தத்தை மாற்றுவதே ஜீவகாருண்யமாகும்.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

இலக்கினை அடையும் வரை

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*   
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில் தான் உள்ளது.

Cinar kavithaigal. நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.  அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.  நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.  சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.  சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.  எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்!  அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.  எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன். ஆனால் அந்த நபருக்கு , நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை. அவரைக் ...

உன் விழி வழியே எனக்கான பாதை அமைத்திடுவாயோ என்னவளே.!

Cinar kavithaigal. என்னவளே நினைப்பதற்கு முன்பே என்னெதிரில் வந்து நிற்கும் பூங்காற்று நீ! உன் விழி வழியே எனக்கான பாதை  அமைத்திடுவாயோ.. அதில் வந்து  உன்னைக் காண எனக்கு அனுமதியும்  அளித்திடுவாயோ! ஒரு நொடி உன்னை காண்பதற்காக.. காத்திருக்கும்  ஒவ்வொரு நாளும்.. பல யுகங்களை போல  நகர்கிறது! விருப்பம் பிடிக்கும் என்பதே ஒரு போதைதானே.. ஆனாலும் உன் உதட்டின் வார்த்தையில்  கேட்கும் போது அதன் சுகமே தனி ஆலாதி தான்.

கோபப்படாமல் இருப்பவன் புத்திசாலி என்றால் ஒருபோதும் புத்திசாலியாக நான் இருக்கவே மாட்டேன்

Cinar kavithaigal. இதயத்தின் வலிமை  நான் என் இதயத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் ஏனென்றால் அது சிலரால் 💛விளையாடப்பட்டது, 💔ஏமாற்றப்பட்டது, 💔காயங்கள்பட்டது மற்றும் 💔உடைக்கப்பட்டது...! ஆனாலும் அது இன்னும் வேலை செய்கிறது.💓 மன்னிக்கத் தெரிந்தால் வாழ்க்கை அழகாகும்.. மறக்கத் தெரிந்தால் இந்த உலகமே அழகாகும்  அன்பின் துளி உரிமை உள்ள உறவும்.. உண்மை உள்ள அன்பும்.. நேர்மை உள்ள நட்பும்.. நம்பிக்கை உள்ள வாழ்வும்.. என்றும் விட்டுப்போவதுமில்லை... தோற்றுப்போவதுமில்லை! வசந்த காலம்   நாம் இமைக்காமல் பார்த்துக்கொண்ட நொடிகளில் நம் இதயங்களும் இடம்மாறிக்கொண்டது சாலையோர நடைப்பயிற்சியில் காலைநேர தென்றலாய் நீ… மௌனமாக பேசிட உன்னிதழ் மயங்கித்தான் போனது என் மனம்… புன்னகையுடன் ஆழமானஅன்பு   தேட விடும் அன்பை விட தேடி வரும் அன்பை நேசி....!!! அழகாக இல்லாமல் இருக்கலாம்..!! ஆனால் ஆழமான அன்பு இருக்கும்....!!💘 பாக்கியம்   வாழ்க்கையில் இவனையா  தவற விட்டோம் என..  ஒரு பெண் ஏங்கும்  பாக்கியம்  எல்லாம் ஆண்களுக்கும்  அமைந்து விடுவதில்லை  அன்புடன் ஏமாளி அன்போடு பழகுபவன் அ...