முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்!

Cinar🍁kavithaigal. ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை.. ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை.. இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்! நாணலில் தொங்கி நிற்கும் பனித்துளி.. நீராடிவிட்டு வந்தவளின் கோதுமை கன்னத்தில் நீர்துளி! ஏக்கம்   கற்பனை எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்றன.. நம் நிறைவேறா  ஆசைகள்! பிம்பம்   நானும் அழகாகத் தெரிந்தேன்.. அந்தக் கண்ணாடியில் நீ முகம் பார்த்த பிறகு! காந்தம்   அவள் கண்களும் ஒரு வகையில் காந்தம்தான்.. என் இதய இரும்பை ஈர்ப்பதாலே! மரணமே இல்லை   நிறம் பார்த்து வரும் காதல்  நிரந்தரமானது இல்லை.. மனம் பார்த்து வரும் காதலுக்கு மரணமே இல்லை! போதை தான்  அன்பும் ஒரு வகை போதை தான்.. அடிமையானால் ஆயுள் வரை கொல்லும்! காதல் செடி காதல் செடியில்  ஒருமுறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பொய்.. எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதடி உன் ஒவ்வோர் புன்னகையிலும்.. என் காதல் ராட்சசி! இதுவும் பாவம் தான்   நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட.. ஒரு வகையில் பாவம் தான்! பிடிக்காத வாழ்க்கை பிடித்தவரோட...

வேலை செய்யாமல் ஒருவரிடம் பணம் பெறுவது பிச்சைக்கு சமம்.

Cinar🍁kavithaigal . _* ☘️உழைப்பில் தான் சுகம் உள்ளது. உழைப்பில்லாமல் முன்னேற முடியாது.*_ _*☘️வேலை செய்யாமல் ஒருவரிடம் பணம் பெறுவது பிச்சைக்கு சமம்.*_ _*☘️வேலையின்றி எவன் துாங்குகிறானோ அவனைக் காண்பது கெடுதல்.*_ _*☘️எவன் ஒருவன் உடம்பை உழைப்பினாலும், மனதை உற்சாகத்துடன் வைத்துள்ளானோ அவனே சாதனையாளனாக மாறுவான்.*_ _*☘️நம்முடைய இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை, கடவுளின் இஷ்டப்படித்தான் உலகம் நடக்கிறது.* ,,☘️சறுக்கல்கள் இருந்தால் தான் சாதனைகள் சாத்தியம் ☘️சமயோசிதமாக செயல்பட்டு சரித்திரம் படைப்பதொன்றும் கடினமானதல்ல                      ☘️தோல்வி என்பதே கிடையாது முயற்சி செய்யுங்கள் முயற்சி வெற்றி பெறும்  ☘️எனவே தேவையற்றதைப் பற்றியே சிந்தித்து சிந்தித்து  🌿உங்களுக்குத் தேவையான நேரத்தையெல்லாம் வீணடித்து விடாதீர்கள். ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில் தான் உள்ளது.

Cinar kavithaigal. நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.  அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.  நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.  சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.  சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.  எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்!  அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.  எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன். ஆனால் அந்த நபருக்கு , நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை. அவரைக் ...

இவ்வருடத்தில் என்னை அழ வைத்தவர்களுக்கும் என்னை விட்டு விலகிப் போனவர்களுக்கும் நன்றி...

Cinar kavithaigal. 2023....வருடத்தின் நன்றிகள்.... இவ்வருடத்தில் என்னை  சிரிக்க வைத்த அனைவருக்கும் நன்றி... என்னை அழ வைத்தவர்களுக்கு  மிகவும் நன்றி... என்னோடு அடுத்த வருடம் தொடரப் போகிறவர்களுக்கும் நன்றி... என்னை விட்டு விலகிப் போனவர்களுக்கு மிகவும் நன்றி... என்னை பாராட்டியவர்களுக்கு நன்றி... எனக்கு பாடம் கற்பித்தவர்களுக்கு மிகவும் நன்றி... என்னை அன்பு செய்தவர்களுக்கு நன்றி... என்னை வெறுத்தவர்களுக்கு மிகவும் நன்றி... என்னை தட்டிக் கொடுத்தவர்களுக்கு நன்றி... என்னை தாழ்த்தியவர்களுக்கு மிகவும் நன்றி... எனக்கு உதவியவர்களுக்கு நன்றி... எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு மிகவும் நன்றி... என்றோ ஒருநாள் புரிந்துகொள்ளப்படுவோம் என்ற நம்பிக்கையில் கடக்கப்படுகிறது..சில வருத்தங்களும்சில வலிகளும்...💔 நிச்சயம் ஓர்நாள்நமக்கே திரும்பும்என்பதை நினைவில்கொண்டால்..காயப்படுத்தும் எண்ணம்யாருக்கும் தோன்றாது! அன்பான நண்பர்களுக்கும், நட்புகளுக்கும் உறவுகளுக்கும்  உண்மையாக என்னை நேசித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனதார நன்றிகள்....... வாழ்க வளமுடன்....!!!!

உன் விழி வழியே எனக்கான பாதை அமைத்திடுவாயோ என்னவளே.!

Cinar kavithaigal. என்னவளே நினைப்பதற்கு முன்பே என்னெதிரில் வந்து நிற்கும் பூங்காற்று நீ! உன் விழி வழியே எனக்கான பாதை  அமைத்திடுவாயோ.. அதில் வந்து  உன்னைக் காண எனக்கு அனுமதியும்  அளித்திடுவாயோ! ஒரு நொடி உன்னை காண்பதற்காக.. காத்திருக்கும்  ஒவ்வொரு நாளும்.. பல யுகங்களை போல  நகர்கிறது! விருப்பம் பிடிக்கும் என்பதே ஒரு போதைதானே.. ஆனாலும் உன் உதட்டின் வார்த்தையில்  கேட்கும் போது அதன் சுகமே தனி ஆலாதி தான்.

நான் மரணித்த பின் நீங்கள் என்னை இழப்பீர்கள் ஆனால் நான் அதை உணர முடியாது இப்போதே என்னை வந்து சந்தியுங்கள் .

Cinar kavithaigal. *நீங்கள் விரும்பினால்*  *என்னுடன் அதிக நேரம் செலவலிக்க முடியும்*, நான் இறந்தவுடன்.*  *உங்கள் கண்ணில் கண்ணீர் வழியும்*  *ஆனால் அது எனக்கு எப்படி தெரியும்*  *இப்போதே என்னுடன் அழுது விடுங்கள்*.  *நீங்கள் எனக்காக அஞ்சலி செலுத்த பூக்களை அனுப்புவீர்கள்*,  *ஆனால் என்னால் அதைப் பார்க்க முடியாது*  *அதற்கு பதிலாக இப்போதே பூக்களை அனுப்பிவையுங்கள்*  *எனக்கு பாராட்டு வார்த்தைகள் தெரிவித்து சொல்லி தூக்கம் படுவீர்கள்*  *ஆனால் நான் அதைக் கேட்க முடியாது ஆதலால்*.  *இப்போதே என்னைப் பாராட்டுங்கள்*  *என் தவறுகளை உடனேயே மன்னித்து விடுவீர்கள்*  *ஆனால் அது எனக்கு எப்படி தெரியும் ஆகவே*.....  *  இப்போதே அவற்றை மறந்துவிட்டு அதற்கு பதிலாக நான் செய்த தவறுகளை இப்போதே மறந்து விடுங்கள்.  *நான் மரணித்த பின் நீங்கள் என்னை இழப்பீர்கள்,*  *ஆனால் நான் அதை உணர முடியாது.*  *இப்போதே என்னை வந்து சந்திக்கவும்.*  *நீங்கள் விரும்பினால்*  *என்னுடன் அதிக நேரம் செலவலிக்க முடியும்*,  *அதற்கு பதிலாக இப்போதே என்னுடன் ந...

இந்த அன்பு துளிர்க்கும் ஒவ்வொரு முறையும் தலையில் அடித்து சிரித்துக்கொள்கிறோம்.நானும் என் காதலும்

Cinar kavithaigal. நானும் என் காதலும் ஒவ்வொரு சண்டைக்குப் பிறகும் என்னை பிளாக் செய்யச் சொல்லி உன்னிடம் கெஞ்சிக்கோண்டிருக்கிறேன்.. அவ்வளவு நேரமும் நீ தாமதமாய் வரும் வரை காத்திருந்து விட்டு வந்த பின்பு ஏன் வந்தாய் என்று கோபித்துக் கொள்கிறேன்.. அலைபேசி உரையாடலில் நீ கெஞ்சும் "லவ் யூ"க்களை சொல்லாமல் குறுஞ்செய்தியில் ஆங்ரி இமோஜியுடன் "ஹேட் யூ" க்களை அனுப்பிக்கொண்டிருப்பேன்.. இந்தப் ப்ரியத்திற்கு கொம்பு முளைக்கும் போதெல்லாம் தலையில் அடித்துக் கொண்டு சிரித்துக் கொள்கிறோம்.. நானும் என் காதலும் யாரிடமும் எதையும்  எதிர்பார்க்காத  என் மனம்.. உன்னிடம்  மட்டும் ஏனோ எதிர்பார்ப்பின்  ஏக்கத்தோடு.. மௌனமாய் நிற்கிறது